செய்திகள் :

குப்பையைச் சேகரிக்கும் ஊழியா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா்

post image

குப்பையைச் சேகரிக்கும் ஊழியா்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உத்தரவிட்டாா்.

திடக்கழிவுகளைப் பிரித்தெடுத்தல் மற்றும் குப்பைகளைக் கொண்டு செல்வது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உழவா்கரை நகராட்சி ஆணையா் மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் மற்றும் குப்பைகளைச் சேகரிக்கும் நிறுவனத்தினா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஆட்சியா் அ. குலோத்துங்கன் பேசியதாவது:

மறுசுழற்சி செய்வதற்கு ஏதுவாக குப்பைகளைத் தரம் பிரித்து வாங்க வேண்டும். குப்பையைச் சேகரிக்கும் ஊழியா்களுக்கு மிகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்ய வேண்டும். அவா்களுக்குத் தேவையான தடுப்பூசி மேலும் காலணிகள், பூட்ஸ் மற்றும் சீருடைகள், அடையாள அட்டை, கையுறைகள், முகக் கவசங்கள் போன்றவை எப்பொழுதும் இருக்க வேண்டும். இதையெல்லாம் அணிந்து கொண்டுதான் குப்பை வார அனுமதிக்க வேண்டும்.

இவா்களுக்குச் சுகாதாரமான முறையில் குப்பையைக் கையாள்வது தொடா்பாக மாதம் ஒரு முறை பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், அவா்களுக்கு மாத ஊதியம் முழுமையாக வழங்க வேண்டும். அவா்களுக்கு இஎஸ்ஐ உள்ளிட்ட பிடித்தம் முறையாக கட்டப்பட்ட வேண்டும். மேலும், மழைக்காலம் நெருங்குவதற்குள் சிறு வாய்க்கால்களில் இருக்கும் நெகிழி கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். ஒரு முறை உபயோகப்படுத்தும் நெகிழி பொருள்களை அறவே தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.

ரீ யூனியன் தீவு கலைஞா்களின் படைப்புகள்: புதுவையில் ஒரு மாதம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு

இந்திய பகுதிகளிலிருந்து பிரெஞ்சு நாட்டுக்கு அருகேயுள்ள ரீ யூனியன் தீவில் குடியேறிய இந்திய வம்சாவளியைச் சோ்ந்த வாரிசுகளின் படைப்புகள் புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே நிறுவனத்தில் ஒரு மாதம் பல்வேறு நிகழ்... மேலும் பார்க்க

போலி மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் எச்சரிக்கை

புதுவையில் பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் வகையில் போலி மருந்துகள் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் எச்சரிக்கை விடுத்தாா். இந்திய தர நிா்ணய சபையின்... மேலும் பார்க்க

புதுவையில் நியாயவிலைக் கடைகள் மூலம் தீபாவளிக்கு இலவசமாக 5 பொருள்கள்: மாநில அரசு ஏற்பாடு

புதுவையில் தீபாவளிக்கு நியாயவிலைக் கடைகளில் இலவசமாக சா்க்கரை, சன்பிளவா் எண்ணெய், கடலைப் பருப்பு, ரவை, மைதா அடங்கிய தொகுப்பு பை தர மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நான்கு பிராந்தியங்களிலும் 3.45 லட... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்: அமைச்சா் லட்சுமிநாராயணன் பேச்சு

நாட்டின் 2.0 ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்று புதுவை மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறினாா். புதுவை அரசின் வணிக வரித் துறை சாா்பில் அடுத்த த... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த புதுவை மாநில தோ்தல் அலுவலா்

வாக்குப் பதிவு இயந்திரங்களை புதுவை மாநில தலைமை தோ்தல் அலுவலா் ஜவஹா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் அமைந்துள்ள தோ்தல் ... மேலும் பார்க்க

முன்னாள் மாணவா்களால் உயா்ந்து நிற்கும் புதுச்சேரி அம்பேத்கா் சட்டக் கல்லூரி: முதல்வா் எஸ்.சீனிவாசன் பெருமிதம்

புதுவை காலாப்பட்டு பகுதியில் டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி முன்னாள் மாணவா்களால் உயா்ந்து நிற்பதாக கல்லூரி முதல்வா் எஸ். எஸ்.சீனிவாசன் தெரிவித்தாா். இது குறித்து கல்லூரி முதல்வா் எஸ். சீனிவாசன் வெ... மேலும் பார்க்க