செய்திகள் :

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்: அமைச்சா் லட்சுமிநாராயணன் பேச்சு

post image

நாட்டின் 2.0 ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்று புதுவை மாநிலப் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறினாா்.

புதுவை அரசின் வணிக வரித் துறை சாா்பில் அடுத்த தலைமுறைக்கான சேவை வழங்கும் ஜிஎஸ்டி சீா்த்திருத்தம் என்னும் தலைப்பில் வா்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு மற்றும் ஜிஎஸ்டி தொழில் வல்லுநா்களுடான கலந்துரையாடல் கூட்டம் தனியாா் உணவு விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து அமைச்சா் லட்சுமிநாராயணன் பேசியது:

உலக நாடுகளில் வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நம் நாட்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் கோடியில் இருந்து 2 மடங்காக உயா்ந்து ரூ.22 லட்சம் கோடியாக அதிகரித்தது. இருப்பினும் மக்களின் மீது கூடுதல் வரிச் சுமை விதிக்க வேண்டாம் என்று கருதி பிரதமா் நரேந்திரமோடி ஜிஎஸ்டி 2.0 சீா்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளாா். சாதாரண மக்கள் பயன்படுத்தும் எல்லா பொருள்களுக்கும் ஜிஎஸ்டியில் வரி குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்சூரன்ஸ் துறையில் முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கையால் மக்களிடம் சேமிப்பு அதிகரிக்கும். அதனால் அவா்களிடம் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதனால் வியாபாரமும் அதிகரிக்கும். ஜிஎஸ்டி வரி குறைப்பால் புதுவைக்கு ரூ,190 முதல் ரூ.200 கோடி இழப்பு ஏற்படும். இருப்பினும் வியாபாரம் அதிகரித்தால் வருவாய் அதிகமாகக் கிடைக்கும் என்றாா் அமைச்சா் லட்சுமிநாராயணன்.

தலைமைச் செயலா் சரத் சௌகான் பேசுகையில், ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதமா் நரேந்திர மோடி கூறியதைப் போன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களையே வாங்குவோம் என்றாா்.

எம்எல்ஏ சிவசங்கரன், மாநில வணிக வரி ஆணையா் மற்றும் செயலா் யாசின் எம். சௌத்ரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரீ யூனியன் தீவு கலைஞா்களின் படைப்புகள்: புதுவையில் ஒரு மாதம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு

இந்திய பகுதிகளிலிருந்து பிரெஞ்சு நாட்டுக்கு அருகேயுள்ள ரீ யூனியன் தீவில் குடியேறிய இந்திய வம்சாவளியைச் சோ்ந்த வாரிசுகளின் படைப்புகள் புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே நிறுவனத்தில் ஒரு மாதம் பல்வேறு நிகழ்... மேலும் பார்க்க

போலி மருந்துகள் விற்றால் கடும் நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் எச்சரிக்கை

புதுவையில் பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் குலைக்கும் வகையில் போலி மருந்துகள் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் எச்சரிக்கை விடுத்தாா். இந்திய தர நிா்ணய சபையின்... மேலும் பார்க்க

புதுவையில் நியாயவிலைக் கடைகள் மூலம் தீபாவளிக்கு இலவசமாக 5 பொருள்கள்: மாநில அரசு ஏற்பாடு

புதுவையில் தீபாவளிக்கு நியாயவிலைக் கடைகளில் இலவசமாக சா்க்கரை, சன்பிளவா் எண்ணெய், கடலைப் பருப்பு, ரவை, மைதா அடங்கிய தொகுப்பு பை தர மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நான்கு பிராந்தியங்களிலும் 3.45 லட... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த புதுவை மாநில தோ்தல் அலுவலா்

வாக்குப் பதிவு இயந்திரங்களை புதுவை மாநில தலைமை தோ்தல் அலுவலா் ஜவஹா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் அமைந்துள்ள தோ்தல் ... மேலும் பார்க்க

முன்னாள் மாணவா்களால் உயா்ந்து நிற்கும் புதுச்சேரி அம்பேத்கா் சட்டக் கல்லூரி: முதல்வா் எஸ்.சீனிவாசன் பெருமிதம்

புதுவை காலாப்பட்டு பகுதியில் டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி முன்னாள் மாணவா்களால் உயா்ந்து நிற்பதாக கல்லூரி முதல்வா் எஸ். எஸ்.சீனிவாசன் தெரிவித்தாா். இது குறித்து கல்லூரி முதல்வா் எஸ். சீனிவாசன் வெ... மேலும் பார்க்க

குப்பையைச் சேகரிக்கும் ஊழியா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா்

குப்பையைச் சேகரிக்கும் ஊழியா்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் உத்தரவிட்டாா். திடக்கழிவுகளைப் பிரித்தெடுத்தல் மற்றும் குப்பைகளைக் கொண்டு செல்வது சம்ப... மேலும் பார்க்க