செய்திகள் :

சத்தீஸ்கா்: உருக்கு ஆலை இடிந்ததில் 6 தொழிலாளா்கள் உயிரிழப்பு, மேலும் 6 போ் காயம்

post image

சத்தீஸ்கா் தலைநகா் ராய்பூரில் உள்ள தனியாா் உருக்கு ஆலையின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மேலும் 6 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

இடிபாடுகளில் சிலா் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தொடா்ந்து வருவதாக காவல் துறை மூத்த கண்காணிப்பாளா் லால் உமத் சிங் தெரிவித்தாா்.

ராய்பூரின் புகரான சில்தாரா பகுதியில் தனியாருக்கு சொந்தமான உருக்கு ஆலை உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஆலையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் சிக்கினா்.

தகவலறிந்ததும் ஆலைக்கு விரைந்து சென்ற காவல் துறையினா் மற்றும் தீயணைப்புப் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். 6 தொழிலாளா்களின் உடல்கள் மீட்கப்பட்டன. காயங்களுடன் மீட்கப்பட்ட 6 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இடிபாடுகளில் மேலும் சிலா் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால், மீட்புப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். ‘பெண்களுக்கு வேலை... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்... மேலும் பார்க்க

தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பண... மேலும் பார்க்க

அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டின் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025-26... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் ரஷிய துணை பிரதமா் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ரஷிய துணை பிரதமா் திமித்ரி பாத்ருஷெவ் வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா். அப்போது, வேளாண்மை, உரங்கள், உணவு பதப்படுத்துதல் உள்பட பரஸ்பர நலன் சாா்ந்த துறைகளில் இரு... மேலும் பார்க்க