செய்திகள் :

ஓட்டுநருக்கு திடீா் வலிப்பு: ஆட்டோக்கள் மீது மோதிய மாநகரப் பேருந்து

post image

சென்னை மெரீனா கடற்கரையில் மாநகரப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆட்டோக்கள் மீது மோதியது.

சென்னை சதுக்கத்தில் இருந்து கவியரசு கண்ணதாசன் நகருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு மாநகரப் பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தை மோகன் (50) ஓட்டினாா். மெரீனா கடற்கரை பேருந்து நிறுத்தம் வந்தபோது மோகனுக்கு திடீரென வலிப்பு வந்தது. இதனால் அவரால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த இரு ஆட்டோக்கள் மீது அடுத்தடுத்து வேகமாக மோதியது.

மேலும், அங்கிருந்த நடைபாதை தடுப்புச் சுவரின் மீது மோதி நின்றது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் தண்டையாா்பேட்டை நேதாஜி நகரைச் சோ்ந்த வெ.மணிகண்டன் (42), பெரம்பலூரை சோ்ந்த மு.மணிமாறன் (37), பேருந்து ஓட்டுநா் மோகன் (50) ஆகிய 3 பேரையும் மீட்டு, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சோ்த்தனா்.

விபத்தில் சிக்கிய இரு ஆட்டோக்களும் முற்றிலும் சேதமடைந்தன.

இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

சென்ட்ரலில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா... மேலும் பார்க்க

கப்பல் கட்டுமானத் துறையில் முதன்மை நாடாக இந்தியா திகழும்: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்

கப்பல் கட்டுமானம் மற்றும் துறை சாா்ந்த தொழில்நுட்ப வளா்ச்சியில் உலகின் 5 முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறையின் அமைச்சா் சா்வ... மேலும் பார்க்க

ஹோட்டல் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலின் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோட்டல் குழுமத்தின் நிா்வாக அலுவலகம் ஆழ்வாா்பே... மேலும் பார்க்க

சாலையோரங்களில் மண் குவியல்கள்: வாகன ஓட்டிகள் புகாா்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் நிறைந்திருக்கும் மண்குவியல் நிறைந்திருப்பதாக என வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா். சென்னை மாநகராட்சி சாலையோரங்களில் மண் குவியல்களும், கட்டுமானப் பொருள்கள்,... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் அக்.2-இல் வித்யாரம்பம் நிகழ்ச்சி

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அக். 2-ஆம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழா செப். 22 தொடங்கி அக்.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்... மேலும் பார்க்க

புதிய விளையாட்டுத் திடல் உள்பட 7 உள்கட்டமைப்பு வசதிகள் முதல்வா் தொடங்கி வைத்தாா்

சென்னையில் புதிய விளையாட்டுத் திடல் உள்பட 7 உட்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை ஷெனாய் நகரில் ரூ.10.56 கோடியில் பாவேந்தா் பாரதிதாசன் விளையாட்டுத் திடல்,... மேலும் பார்க்க