செய்திகள் :

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி நகரும் அபிஷேக் சர்மா!

post image

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கான போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அசத்தியது. துபையில் நாளை (செப்டம்பர் 28) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா, 309 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம், டி20 வடிவிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

மேலும், சர்வதேச டி20 தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய சாதனையை நோக்கி அவர் நகர்ந்து வருகிறார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் பில் சால்ட் 331 ரன்கள் குவித்துள்ளதே, சர்வதேச டி20 தொடர் ஒன்றில் வீரர் ஒருவரால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்து வருகிறது.

ஆசிய கோப்பை தொடரில் 309* ரன்கள் குவித்து விளையாடி வரும் அபிஷேக் சர்மா, இங்கிலாந்து வீரர் பில் சால்ட்டின் சாதனையை முறியடிக்க இன்னும் 23 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. அதேபோல, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி 319 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம், சர்வதேச டி20 தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கோலி தன்வசம் வைத்துள்ளார். இதனை முறியடிக்க, அபிஷேக் சர்மாவுக்கு இன்னும் 11 ரன்களே தேவைப்படுகின்றன.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நாளை (செப்டம்பர் 28) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 23 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், பில் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரின் சாதனையையும் முறியடித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைக்கு சொந்தக்காரராவார்.

சர்வதேச டி20 தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்

பில் சால்ட் - 331 ரன்கள், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, 2023 (5 இன்னிங்ஸ்களில்)

விராட் கோலி - 319 ரன்கள், 2014 டி20 உலகக் கோப்பை (6 இன்னிங்ஸ்களில்)

திலகரத்னே தில்ஷன் - 317 ரன்கள், 2009 டி20 உலகக் கோப்பை (7 இன்னிங்ஸ்களில்)

முகமது ரிஸ்வான் - 316 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2022 (6 இன்னிங்ஸ்களில்)

அபிஷேக் சர்மா - 309* ரன்கள், 2025 ஆசிய கோப்பை தொடர் (6 இன்னிங்ஸ்களில்)

Indian team opener Abhishek Sharma is on the verge of breaking a new record in T20 international cricket.

இதையும் படிக்க: அபிஷேக் சர்மாவுக்கு இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் காலமானார்!

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் பின்நவீனத்துவ இலக்கிய ஆக்கங்களை எழுதியவர்களில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களில் ஒருவரான ரமேஷ் பிரேதன் உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் இன்று ... மேலும் பார்க்க

சீமான் பேச்சு அநாகரிகத்தின் உச்சம்: திமுக கண்டனம்

பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். போன்றவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தரந்தாழ்த்து வாய்த்துடுக்காகப் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம் என திமுக மாணவரணி செயலாளர் ராஜ... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் இளைஞர் கொலை!

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் இளைஞர் ஒருவரை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்பு அருகே காலி வீட்டுமனை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதா... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் களைகட்டும் பண்டிகைக் கால மின்வணிகம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பால் உற்சாகம் அடைந்துள்ள வாடிக்கையாளர்களால், மின்வணிக(இணையவழி) நிறுவனங்களின் பண்டிகைக் கால விற்பனை களைகட்டி வருகிறது.மின்வணிக நிறுவனமான அமேசான், அதன் விழாக்கால விற்பனையின் முதல் இரண்... மேலும் பார்க்க

இத்தாலிய நிறுவனத்தை வாங்குகிறது டிவிஎஸ்!

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா், இத்தாலியின் வாகன வடிவமைப்பு மற்றும் பொறியியல் நிறுவனமான என்ஜின்ஸ் இன்ஜினியரிங் எஸ்.பி.ஏ.வை வாங்கவிருப்ப... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி: சீமான் விமாிசனம்

சென்னை: தமிழகத்தில் தற்போது நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சித்துள்ளாா்.சென்னையில் அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:... மேலும் பார்க்க