செய்திகள் :

தலைமைச் செயலகத்தில் முதல்வர்! அவசர ஆலோசனை!

post image

சென்னை தலைமைச் செயலகம் விரைந்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்துக்கு விரைந்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருடன் தொலைபேசியில் நிலைமையைக் கேட்டறிந்த முதல்வர், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவியை செய்யுமாறு உத்தரவிட்டார்.

நாளை கரூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ளார்.

Chief Minister at the Secretariat - Emergency Meeting with ministers

இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசலில் பலி 31-ஆக உயர்வு! -செந்தில் பாலாஜி

கரூர் பலி: அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு!

கரூரில் விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசின் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, 04324 256306 7010806322 ஆ... மேலும் பார்க்க

கண்ணீர் விட்டழுத அன்பில் மகேஸ்!

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் சடலங்களைக் கண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்ணீர் விட்டழுதார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது! - பவன் கல்யாண்!

கரூர் நெரிசல் பலி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 6 கு... மேலும் பார்க்க

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: விஜய்

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.விஜய் வெளியிட்ட பதிவு:”இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனை... மேலும் பார்க்க

கரூர் பலி: தமிழக அரசிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியானது தொடர்பாக தமிழக அரசுக்கு விளக்கம் கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் பலி: நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்!

கரூர் நெரிசல் பலி சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 36 பேர் பரிதாப... மேலும் பார்க்க