செய்திகள் :

கரூர் பலி: தமிழக அரசிடம் விளக்கம் கோரியது மத்திய அரசு!

post image

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியானது தொடர்பாக தமிழக அரசுக்கு விளக்கம் கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தவெக கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Karur deaths: Central government seeks explanation from Tamil Nadu government

இதையும் படிக்க : கரூர் நெரிசல் பலி: நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்!

கரூரில் இன்று கடையடைப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (செப். 28) ஒருநாள் முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில... மேலும் பார்க்க

கரூர் பலி: அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு!

கரூரில் விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசின் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, 04324 256306 7010806322 ஆ... மேலும் பார்க்க

கண்ணீர் விட்டழுத அன்பில் மகேஸ்!

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் சடலங்களைக் கண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்ணீர் விட்டழுதார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது! - பவன் கல்யாண்!

கரூர் நெரிசல் பலி சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் இரங்கல் தெரிவித்துள்ளார்.கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 6 கு... மேலும் பார்க்க

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: விஜய்

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.விஜய் வெளியிட்ட பதிவு:”இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனை... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் பலி: நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம்!

கரூர் நெரிசல் பலி சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 36 பேர் பரிதாப... மேலும் பார்க்க