செய்திகள் :

கரூர் துயரம்: ``எப்படி தேற்றுவது தெரியவில்லை, கண்ணீர் முட்டுகிறது'' - சினிமா பிரபலங்கள் இரங்கல்

post image

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 12 பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களைக் காண தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

இந்த சம்பவத்துக்கு இந்திய அரசியல் தலைவர்கள் முதல் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக சினிமா பிரபலங்களும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ், ``கோரக் காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படித் தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்.

கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் பார்த்திபன்,

``கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு யார் எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை.

இன்னும் சிகிச்சையில் இருக்கும் 58 பேரும் விரைந்து குணமடைய அனைவரும் வேண்டிக் கொள்வோம்!'' எனத் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் விஷ்ணு விஷால்,

``கரூர் செய்தியைக் கேட்டு வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன். கரூரில் நடந்த துயரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன.

துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ், "கரூர் பெருந்துயரம் நெஞ்சை அடைக்கிறது. இந்த இரவையும் இந்த பேரிழப்பையும் எப்படி கடப்பது, கண்ணீர் முட்டுகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

கரூர் துயரம்: ``குறைந்தபட்சம் இதையாவது செய்யுங்கள்'' - விஜயிடம் நடிகர் விஷால் வைத்த கோரிக்கை

இன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அவரின் பரப்புரையில் ஏகப்பட்ட மக்கள் கூடி நெரிசல் ஏற்பட்டுள்ளது.இதுவரை கிடைத்த தகவலின்படி, இந்த நெரிசலில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்ப... மேலும் பார்க்க

Saraswathi: இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார்; சகோதரியுடன் அவரே இணைந்து தயாரிக்கிறார்

இயக்குநராகக் களமிறங்குகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘போடா போடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. அடுத்தடுத்து கோலிவுட், டோல... மேலும் பார்க்க

Kalaimamani Awards: ``சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது!" - நெகிழும் விக்ரம் பிரபு

கடந்த 23-ம் தேதி 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது பெறவிருப்பவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசு சார்பில் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு உ... மேலும் பார்க்க

Kushi: ``விறுவிறு விஜய், துறுதுறு ஜோதிகா!'' - ̀குஷி' ரீ ரிலீஸ் குறித்து பாடலாசிரியர் வைரமுத்து

‘கில்லி’ திரைப்படம் ரீ ரிலீஸில் அதிரடியாகக் கொண்டாடப்பட்டது. ஒரு ரீ ரிலீஸ் படத்திற்கு இப்படியான ஒரு வரவேற்பு கிடைக்குமா எனப் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தது. அத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் ... மேலும் பார்க்க

Deva: ``இந்த அங்கீகாரம் உங்களில் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது!'' - ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தேவா

இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட் இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது. அதற்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கிறார் தேவா. அங்கு அவர் ஆஸ்திரேலியாவின் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையத்தினால்... மேலும் பார்க்க