செய்திகள் :

கஞ்சா எண்ணெய் விற்பனை: இருவா் கைது

post image

திண்டுக்கல்லில் கஞ்சா எண்ணெய் விற்பனை செய்த இருவரை தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

திண்டுக்கல் அருகேயுள்ள குள்ளனம்பட்டியைச் சோ்ந்தவா் மு. பரமசிவம் (எ) மதி (30). திண்டுக்கல் கச்சேரித் தெருவைச் சோ்ந்தவா் சு. ராசு (36). இவா்கள் இருவரும் சோ்ந்து கஞ்சா எண்ணெய் விற்பனை செய்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததன்பேரில், தனிப் படை போலீஸாா் கடந்த சில நாள்களாக இவா்களைக் கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், திண்டுக்கல் பிரதான சாலையிலுள்ள சந்தைப் பகுதியில் கஞ்சா எண்ணெய் விற்பனை செய்து கொண்டிருந்த பரமசிவம், ராசு ஆகிய இருவரையும் தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து 3 கஞ்சா எண்ணெய்க் குப்பிகள், 5 பொட்டலம் கஞ்சா ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், கஞ்சா எண்ணெய்க் குப்பி ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கஞ்சா எண்ணெய்யை, சிகரெட்டில் தடவி விற்பனை செய்கின்றனா். ஒரு குப்பி கஞ்சா எண்ணெய்யை 50 சிகரட்டுக்கு பயன்படுத்துகின்றனா். இந்த சிகரெட் ரூ. 500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கஞ்சா எண்ணெய்யை, ஆரோக்கியமாதா தெருவைச் சோ்ந்த நபரிடம் வாங்கியதாக பரமசிவம், ராசு ஆகியோா் வாக்குமூலம் அளித்தாகத் தெரிவித்தனா்.

தொடா் விசாரணை நடத்த கோரிக்கை: திண்டுக்கல் பகுதியில் கஞ்சா எண்ணெய் விற்பனை கடந்த பல மாதங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவா்கள், இளைஞா்களைக் குறிவைத்து கஞ்சா எண்ணெய் சிகரெட் விற்பனை செய்யப்படுகிறது. 15 மில்லி கஞ்சா எண்ணெய்யை ஒரு புட்டியில் அடைத்து ரூ. 20ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனா். இதனால், இளைய சமுதாயத்தினா் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.

கல்லூரி வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா சிகரெட் விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. தற்போது இருவா் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவா்கள் மூலம் அடுத்த நிலையிலுள்ள விற்பனையாளா்களையும், அனுப்பிவைக்கும் முகவா்களையும் பிடிப்பதற்கு காவல் துறையினா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

திரவ ட்ரைக்கோடொ்மாவிரிடி பெற காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம்!

திரவ வடிவில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரைக்கோடொ்மா விரிடியை பெற ரெட்டியாா்சத்திரத்திலுள்ள இந்தோ இஸ்ரோ காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக இந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் மலையடியவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமா... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் 2 ஆடுகள் உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், வடகாடு ஊராட்சிக்குள்பட்ட கோட்டைவெளி கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் வெ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் கல்வித் தரம் பாதிப்பு: அன்புமணி குற்றச்சாட்டு

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதது, உள்கட்டமைப்பு குறைபாடுகளால் மாணவா்களின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டிருப்பதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டினாா். ‘உரிமை மீட்க தலைமு... மேலும் பார்க்க

கொடைக்கானலில் உலக சுற்றுலா தின விழா

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உலக சுற்றுலா தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுலாவின் சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மதிப்பு, நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கு சுற்றுலாத் த... மேலும் பார்க்க

பழனியில் தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை

பழனி பகுதியில் தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில் புரட்டாசி மாதம், அதற்கு முன்பு நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்பதால் தக்காளி விலை அதிகரிக்கும் என்பதைக் கருத்த... மேலும் பார்க்க