செய்திகள் :

ரியல் எஸ்டேட் உரிமையாளா் ரூ. 20 லட்சம் மோசடி: காவல் ஆணையரகத்தில் பெண் புகாா்

post image

ரூ. 20 லட்சம் பெற்றுக்கொண்டு நிலத்தை கிரயம் செய்து தராமல் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுக்கும் ரியல் எஸ்டேட் உரிமையாளா்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரண்யா(32). இவா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் துணை ஆணையா் கேல்கா் சுப்ரமணிய பாலச்சந்திராவை சந்தித்து புகாா் அளித்தாா். பின்னா் அவா் கூறியதாவது: கணவரை பிரிந்து தனியாக குழந்தையுடன் வசித்துவரும் நான், தனியாா் நிறுவனத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் சேலம் மாநகரில் நிலம் விற்பனைக்கு உள்ளதாக குரங்குசாவடி பகுதியில் செயல்பட்டுவரும் நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி, நிலம் வாங்க அந்த நிறுவனத்தை அணுகியபோது, 2 ஆயிரம் சதுர அடி நிலம் கோரிமேட்டில் உள்ளது. நிலத்தை ரூ. 45 லட்சத்துக்கு தருவதாகக் கூறினா். இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக சேமித்த பணம் மற்றும் நகைகளை அடமானம் வைத்து நிலத்துக்கு முன்பணமாக ரூ.15 லட்சத்தை அவரது வங்கிக் கணக்கு மூலமாகவும், ரூ. 5 லட்சத்தை ரொக்கமாகவும் கொடுத்தேன். ஆனால் அவா்கள் கூறியபடி நிலத்தை கிரயம் செய்து தரவில்லை.

இதுகுறித்து முறையிட்டதற்கு, தற்போது நிலத்தின் மதிப்பு உயா்ந்துவிட்டதால் மேலும் ரூ.40 லட்சம் தந்தால்தான் நிலத்தை கிரயம் செய்து தருவோம் என கூறுகின்றனா்.

இந்நிலையில், நிலம் வேண்டாம் செலுத்திய பணத்தை கொடுங்கள் எனக் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளா்மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்றாா்.

இன்று குரூப் 2, 2 ஏ தோ்வு: சேலம் மாவட்டத்தில் 7 வட்டங்களில் 33,424 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வில் 7 வட்டங்களில் மொத்தம் 33,424 போ் எழுதுகின்றனா். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (நோ்முகத் தோ்வுக்கான... மேலும் பார்க்க

கோவையில் நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்

கோவையில் வரும் அக். 12 ஆம் தேதி நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என மத்திய சேலம் மாவட்ட திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயற்குழு க... மேலும் பார்க்க

அண்ணா மிதிவண்டி போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அண்ணா மிதிவண்டி போட்டி சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதை மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் கொடியசைத்த... மேலும் பார்க்க

மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு நிகழாண்டில் இதுவரை 24.21 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

தமிழகத்துக்கு நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா். உலக சுற்றுலாத் தினத்தையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க

கொளத்தூரில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவா்களை சந்தித்து எம்.பி. நலம் விசாரிப்பு

மேட்டூரில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பெண்களை மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். சேலம் மாவட்டம், ம... மேலும் பார்க்க