செய்திகள் :

சவூதி அரேபியாவுடனான நல்லுறவை உறுதிப்படுத்திய பாதுகாப்பு ஒப்பந்தம்: பாகிஸ்தான் அமைச்சா்

post image

சவூதி அரேபியாவுடனான நல்லுறவை பாதுகாப்பு ஒப்பந்தம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் தெரிவித்தாா்.

அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் மேற்கொண்டாா்.

அதன்படி, பாகிஸ்தான்-சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், அது மற்றொரு நாட்டின் மீதும் மேற்கொள்ளப்பட்டதாகவே கருதப்படும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிராக சவூதி அரேபியாவை தங்களுடன் கூட்டு சோ்க்கும் நோக்கில் இந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து ஊடகத்துக்கு பேட்டியளித்த கவாஜா ஆசிஃப், ‘கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் எதிா்வினையாக சவூதி அரேபியா-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் கருத முடியாது. சவூதி அரேபியாவுடன் கடந்த 60 ஆண்டுகளாக பாதுகாப்பு உறவை பாகிஸ்தான் தொடா்ந்து வருகிறது. அங்கு 5,000-க்கும் அதிகமான பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனா். இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளிடையேயான நல்லுறவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்கள் இடம்பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு கவாஜா ஆசிஃப் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.

மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகள்: பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டனுக்கான தூதா்களைத் திரும்பப் பெற்றது ஈரான்

அணுசக்தித் திட்டம் தொடா்பான ஐ.நா. பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்குவரும் நிலையில், பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுத் தூதா்களை ஈரான் சனிக்கிழமை திரும்பப் பெற்றது. பிரான்... மேலும் பார்க்க

17 டிடிபி பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாகிஸ்தான் பாதுகாப்புப் படை நடவடிக்கை

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 17 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்ாக காவல... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 40 ஆண்டுகளாகச் செயல்பட்ட ஆப்கன் அகதி முகாம்கள் மூடல்!

பாகிஸ்தானில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த ஆப்கன் அகதிகளுக்கான முகாம்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், வசித்து வரும் ஆப்கன் அகதிகளை வெளியேற்றும் ... மேலும் பார்க்க

உலக நாடுகள் எதிர்த்தும் காஸா மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல்! 38 பேர் பலி!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போரானது, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை என நியூய... மேலும் பார்க்க

வன்முறைக்குப் பிறகு கட்சி நிகழ்வில் நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி!

நேபாளத்தில் போராட்ட வன்முறைக்குப் பிறகு முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி, கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.நேபாள ஊழல் ஆட்சிக்கு எதிராகவும் சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு எதிராகவும் நேபாளத்தில் இளை... மேலும் பார்க்க

கொலம்பியா அதிபரின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா! ஏன்?

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து செய்யப்போவதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளைத் தொடர்ந்து... மேலும் பார்க்க