செய்திகள் :

`கூட்ட நெரிசல், மக்கள் மிதித்ததில் 2 வயது நிரம்பாத குழந்தை உயிரிழப்பு' - கரூர் துயர சம்பவம்

post image

நேற்று நடந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 1 3/4 வயது குழந்தை உயிரிழந்திருக்கிறது.

இந்தக் குழந்தையின் பெயர் குரு விஷ்ணு. இவரது பெற்றோர் விமல், மாதேஸ்வரி. விமலின் அக்கா குரு விஷ்ணுவைப் பரப்புரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கூட்ட நெரிசலில் குழந்தை கீழே விழுந்துள்ளது. அங்கே கூடியிருந்த மக்கள் நெரிசலில் குழந்தையின் வயிறு மற்றும் கால் பகுதியில் மிதித்துள்ளனர். இதனால், குழந்தை உயிரிழந்துள்ளது.

கரூர்: விஜய் பரப்புரை
கரூர்: விஜய் பரப்புரை

நேற்று தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டிருந்தார். இவரைக் காண ஏகப்பட்ட மக்கள் கூடியிருந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 10 குழந்தைகள் அடங்குவர். 13 ஆண்களும், 16 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அதிகாலையிலேயே கரூர் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

காயமடைந்தவர்களிடம் ஆறுதல் தெரிவித்தார். தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கரூர் வந்துள்ளார்.

TVK Vijay Karur Stampede Complete Details | கரூரில் என்ன நடந்தது? | முழுமையான தகவல்கள்

கரூரில் நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருக்கின்றனர். களத்தில் என்ன நடந்தது? இவ்வளவு பெரிய இ... மேலும் பார்க்க

கரூர் : 'தப்பு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ...'- விஜய்யை விமர்சித்த சத்யராஜ்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்து விஜய்யை விமர்சித்தும் இருக்கிறா... மேலும் பார்க்க

கரூர்: 'அழுகையை அடக்க முடியல; விஜய் விட்டுபுட்டு ஓடுனது பெரிய தப்பு'- பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கம்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் கிட்டதட்ட 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்ட பலர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகி... மேலும் பார்க்க

கரூர்: `குழந்தைகளைத் தோள்ல வச்சுட்டு வந்தவங்க அப்படியே விழுந்தாங்க!'- சம்பவம் இடத்திலிருந்த ராஜேஷ்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த நிலையில், தவெக பரப்புரைக் கூட்... மேலும் பார்க்க

கரூர்: உயிரிழப்பு, மருந்துவர்கள், பணியிலிருப்பவர்கள் - உதயநிதி சொல்லும் புள்ளிவிவரம்

கரூரில் ஏற்பட்டுள்ள துயர சம்பவத்தை அடுத்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கரூர் வந்தார்.அங்கு உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் தெரிவித்தார்.... மேலும் பார்க்க