செய்திகள் :

கரூர்: 'அழுகையை அடக்க முடியல; விஜய் விட்டுபுட்டு ஓடுனது பெரிய தப்பு'- பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கம்

post image

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் கிட்டதட்ட 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்ட பலர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரல் பார்ப்போரைக் கலங்கடிக்கச் செய்திருக்கிறது.

இந்நிலையில் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் விகடனுக்கு பேட்டி அளிக்கையில், " அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர்னு எல்லா தலைவர்களையும் மந்திரிகளையும் நேர்ல பார்த்திருக்கோம்.

விஜய் பிரசாரம் கரூர்
விஜய் பிரசாரம் கரூர்

எங்க வீடு தேடி வருவாங்க பிரசாரம் பண்ண. நாங்களும் எவ்வளவோ மாநாட்டை நேர்ல போயி பாதுகாப்பா பார்த்துட்டு வந்திருக்கோம்.

இங்க இருந்த மாதிரி தாறுமாறா தள்ளு முள்ளு கூட்டத்தை எங்கயும் பார்த்தது இல்ல. எவ்வளவு மக்கள் இறந்து போயிருக்காங்க.

மனசு தாங்கல. அழுகையை அடக்க முடியல. கரூருக்கு ரொம்ப பெரிய கெட்டபெயர் இது.

இவ்ளோ மக்கள் இறந்து போனப்போ மக்களோட மக்களா நிக்காம விஜய் ஓடுனது ரொம்ப பெரிய தப்பு. உங்க வீட்ல துக்கம் விழுந்தா இப்படிதான் பண்ணுவீங்களா" என்று ஆதங்கத்துடன் பேசினர்.

கரூர்: "இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான்; இருந்தும்!"- விஜய் அறிக்கை

நேற்று கரூரில் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் தவெக தலைவர் விஜய். அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர்: விஜய் பரப்புரைஇதனையடுத்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

கரூர்: 'தாங்க முடியாத துயரம் இது'- நடிகர் கார்த்தி இரங்கல்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

கரூர்: 'ஆனந்த் மீது FIR, விஜய்க்கு துணை ராணுவப் பாதுகாப்பு' - சட்ட நடவடிக்கைகள் அப்டேட்

நேற்று தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். இவரைக் காண ஏராளமான மக்கள் திரள கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து FIR பதியப்பட்டுள்... மேலும் பார்க்க

TVK Vijay Karur Stampede Complete Details | கரூரில் என்ன நடந்தது? | முழுமையான தகவல்கள்

கரூரில் நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருக்கின்றனர். களத்தில் என்ன நடந்தது? இவ்வளவு பெரிய இ... மேலும் பார்க்க