செய்திகள் :

கரூர்: 'இரண்டரை வயது குழந்தை கூட்டத்தில் சிக்கி இறந்திருக்கிறது'- பாதிக்கப்பட்ட தம்பதியினர்

post image

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் கிட்டதட்ட 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மூச்சுத் திணறல் மற்றும் காயங்களால் பாதிக்கப்பட்ட பலர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரல் பார்ப்போரைக் கலங்கடிக்கச் செய்திருக்கிறது.

கரூர் துயர சம்பவம்
கரூர் துயர சம்பவம்

இந்நிலையில் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட தம்பதி விகடனுக்கு பேட்டி அளிக்கையில், " நேற்று மதியம் 2:45 மணிக்கு எங்கள் குழந்தைகளோடு விஜயைப் பார்ப்பதற்காக வந்தோம். அப்போதே கூட்டம் கடுமையாக இருந்தது.

இங்கிருந்து 2 கி.மீக்கு முன்பாக இருக்கும் முனியப்பசாமி கோயில் அருகே விஜய் 5:30 மணிக்கே வந்துவிட்டார்.

ஆனால், அங்கிருந்து அவர் ஸ்பாட்டுக்கு வந்து சேர ஒன்றரை மணி நேரம் ஆனது.

அந்த சமயத்தில்தான் தள்ளுமுள்ளு அதிகமானது. நீண்ட நேரம் நின்றதால் தண்ணீர் தாகத்தில் நிறைய பேர் மயக்கமடைந்தனர்.

அருகிலுள்ள கடைக்காரர்களும் விஜய் மன்றத்து ஆட்களும் முடிந்தளவுக்கு தண்ணீர் பாட்டில்களைக் கொடுத்தனர். ஆனால், கூடிய கூட்டத்துக்கு அதெல்லாம் போதவில்லை.

விஜய் பேச ஆரம்பிக்கும்போதே நிறைய பேர் சுருண்டு விழுந்துவிட்டனர். குழந்தைகளை அழைத்து வந்தவர்கள்தான் ரொம்பவே சிரமப்பட்டார்கள்.

விஜய்யின் கரூர் பிரசார நெரிசல்
விஜய்யின் கரூர் பிரசார நெரிசல்

டூவிலர்களை கவிழ்த்து போட்டு அதன் மீது ஏறி குழந்தைகளை கடைகளின் மேற்கூரைகள் மீது உட்கார வைத்தோம். அதனால் மட்டும்தான் எங்களின் குழந்தைகளைக் காப்பாற்ற முடிந்தது.

பல பேர் கூட்டத்தில் நசுங்கி இறந்ததைக் கண்ணால் பார்த்தோம். எங்கள் வீட்டருகே ஒரு இரண்டரை வயது குழந்தை கூட்டத்தில் சிக்கி இறந்திருக்கிறது அதிலிருந்தெல்லாம் எங்களால் மீண்டு வர முடியவில்லை" என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

கரூர்: "இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான்; இருந்தும்!"- விஜய் அறிக்கை

நேற்று கரூரில் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் தவெக தலைவர் விஜய். அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர்: விஜய் பரப்புரைஇதனையடுத்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

கரூர்: 'தாங்க முடியாத துயரம் இது'- நடிகர் கார்த்தி இரங்கல்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க

கரூர்: 'ஆனந்த் மீது FIR, விஜய்க்கு துணை ராணுவப் பாதுகாப்பு' - சட்ட நடவடிக்கைகள் அப்டேட்

நேற்று தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். இவரைக் காண ஏராளமான மக்கள் திரள கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து FIR பதியப்பட்டுள்... மேலும் பார்க்க

TVK Vijay Karur Stampede Complete Details | கரூரில் என்ன நடந்தது? | முழுமையான தகவல்கள்

கரூரில் நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருக்கின்றனர். களத்தில் என்ன நடந்தது? இவ்வளவு பெரிய இ... மேலும் பார்க்க