செய்திகள் :

கரூர் பலி: இழப்பீடாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் - திருமாவளவன்

post image

கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு தொல். திருமாவளவன் அளித்த பேட்டி:

தவெக பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது. யார் பொறுப்பு என்பதைவிட, தற்போது ஆபத்தான நிலையில் உள்ளவர்களைக் காப்பதே முக்கியம்.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சமும் அரசு வழங்க வேண்டும்.

சம்பவ இடத்துக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று பார்வையிட்டது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலை அளித்திருக்கும் என்று தெரிவித்தார்.

கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: கரூரில் முதல்வர் ஸ்டாலின்! பலியானோருக்கு அஞ்சலி

Thirumavalavan, has asked the Tamil Nadu government to provide Rs. 50 lakh to the families of those killed in the Karur stampede.

விஜய் வீட்டுக்கு ராணுவ பாதுகாப்பு!

தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கரூர் சம்பவத்தின் எதிரொலியாக சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டுக்கு துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போத... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: இபிஎஸ் பிரசாரம் ஒத்திவைப்பு!

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் பலியான சம்பவத்தையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(செப். 28) மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்க... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் இன்று சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தின் நெரிசலில் 39 பேர் பலியான ... மேலும் பார்க்க

என்.ஆனந்த் உள்ளிட்ட தவெகவினர் மீது வழக்கு

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் பலியான நிலையில், அக்கட்சியின் ... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தையடுத்து, இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான தேர்தல் பிரசாரத்தில் 39 பேர் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், இன்று(செப். 28) நடைபெறவிருந்த திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெள... மேலும் பார்க்க