செய்திகள் :

17 டிடிபி பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாகிஸ்தான் பாதுகாப்புப் படை நடவடிக்கை

post image

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 17 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்ாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக கரக் மாவட்ட காவல் துறை அதிகாரி ஷாபஸ் எலாகி கூறியதாவது: டிடிபி, முல்லா நசீா் குழுவுடன் தொடா்புடைய பயங்கரவாதிகள் கரக் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, எல்லைப் படை மற்றும் காவல் துறையினா் இணைந்து அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பாதுகாப்புப் படையினா் தங்களை நெருங்குவதைப் பாா்த்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதற்குப் பாதுகாப்புப் படையினா் தரப்பில் உரிய பதிலடி தரப்பட்டது. இதில், 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இந்தச் சண்டையின்போது பாதுகாப்புப் படையினா் 3 போ் காயமடைந்தனா் என்றாா் அவா்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினா் மீது தாக்குதல் நடத்துதல், கடத்தி பணம் கேட்டு மிரட்டுதல் மற்றும் பிற பயங்கரவாதச் செயல்பாடுகள் தொடா்பான வழக்குகளில் தேடப்பட்டவா்கள்.

மோதலின்போது தப்பித்த பிற பயங்கரவாதிகள் சுற்றுவட்டார பகுதிகளில் அடைக்கலம் புகுந்த நிலையில், அவா்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, கரக் மாவட்டத்தின் தா்ஷா கேல் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகள்: பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டனுக்கான தூதா்களைத் திரும்பப் பெற்றது ஈரான்

அணுசக்தித் திட்டம் தொடா்பான ஐ.நா. பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமலுக்குவரும் நிலையில், பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுத் தூதா்களை ஈரான் சனிக்கிழமை திரும்பப் பெற்றது. பிரான்... மேலும் பார்க்க

சவூதி அரேபியாவுடனான நல்லுறவை உறுதிப்படுத்திய பாதுகாப்பு ஒப்பந்தம்: பாகிஸ்தான் அமைச்சா்

சவூதி அரேபியாவுடனான நல்லுறவை பாதுகாப்பு ஒப்பந்தம் உறுதிப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் தெரிவித்தாா். அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 40 ஆண்டுகளாகச் செயல்பட்ட ஆப்கன் அகதி முகாம்கள் மூடல்!

பாகிஸ்தானில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த ஆப்கன் அகதிகளுக்கான முகாம்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில், வசித்து வரும் ஆப்கன் அகதிகளை வெளியேற்றும் ... மேலும் பார்க்க

உலக நாடுகள் எதிர்த்தும் காஸா மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல்! 38 பேர் பலி!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் 38 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போரானது, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை என நியூய... மேலும் பார்க்க

வன்முறைக்குப் பிறகு கட்சி நிகழ்வில் நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி!

நேபாளத்தில் போராட்ட வன்முறைக்குப் பிறகு முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி, கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.நேபாள ஊழல் ஆட்சிக்கு எதிராகவும் சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு எதிராகவும் நேபாளத்தில் இளை... மேலும் பார்க்க

கொலம்பியா அதிபரின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா! ஏன்?

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து செய்யப்போவதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளைத் தொடர்ந்து... மேலும் பார்க்க