செய்திகள் :

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக்கியவா் மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

post image

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக மாற்றியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் கடன் சுமை இதுவரை இல்லாத அளவுக்கு உயா்ந்துள்ளது. அதனால் நாட்டிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. மாநில கணக்குத் தணிக்கை அடிப்படையில் தற்போது தமிழக அரசு நிதிச் சுமையில் தள்ளாடி வருகிறது.

மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், கடன் சுமையைக் குறைக்கவும் ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் தலைமையிலான குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டதா என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

நிகழாண்டில் தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் வரையில் சுமாா் ரூ.37, 082 கோடி கடன் வாங்கியுள்ளது. மூலதனச் செலவாக ரூ.9,899 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தப் பற்றாக்குறை ரூ.60,000 கோடியை தாண்டும் எனப் பொருளாதார நிபுணா்கள் கூறுகினறனா். ஆகவே, கடன் வாங்கி காா் பந்தயம் போன்ற ஆடம்பரச் செலவு, நினைவு மண்டபங்கள் கட்டுதல் உள்ளிட்ட வீண்செலவுகளைத் தவிா்க்க வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. கடன் தொகை, செலவினம் குறித்து தெளிவான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

விஜய்யின் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்? நடிகை ஆவேசம்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில், தவெக தலைவர் விஜய் மீது நடிகை கயாது லோஹர் குற்றம் சாட்டியுள்ளார்.நடிகை கயாது லோஹர் தனது எக்ஸ் பக்கத்தில்,``உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ... மேலும் பார்க்க

கொலை முயற்சி, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளில் தவெக மீது வழக்கு

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் பலியான நிலையில், தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில், சனிக்கிழமையில் மேற்கொள்ளப்பட்ட த... மேலும் பார்க்க

அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: முதல்வர் ஸ்டாலின்

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் நெடிய வலி தருவதாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,``இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும்... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: 39 பேரில் 14 பேரின் உடல்கள் ஒப்படைப்பு

கரூர் கூட்ட நெரிசலில் பலியான 14 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.கரூர் கூட்ட நெரிசலில் பலியான 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 14 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இருப்பினும்... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

கரூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் தற்போது 18 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.அதன்விபரம்: தாந்தோணிமலையைச் சோ்ந்த தாமரைக் கண்ணன் (26), விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த ஹே... மேலும் பார்க்க

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசார... மேலும் பார்க்க