செய்திகள் :

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

post image

கரூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் தற்போது 18 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

அதன்விபரம்: தாந்தோணிமலையைச் சோ்ந்த தாமரைக் கண்ணன் (26), விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த ஹேமலதா (28), இவருடைய மகள் சாய் லஷ்ணா (8), மகன் சாய் ஜீவா (4), காவலா் காலனியைச் சோ்ந்த சுகன்யா (33), காமராஜபுரத்தைச் சோ்ந்த ஆகாஷ் (23), தனுஷ்குமாா் (24), பசுபதிபாளையத்தை சோ்ந்த வடிவேல் (54), கொடுமுடியைச் சோ்ந்த ரேவதி (52), ஏழூா் புதூரைச் சோ்ந்த சந்திரா (45), பிரியதா்ஷிணி (35), தாரணிகா (14), வடிவேல் நகரைச் சோ்ந்த குரு விஷ்ணு (2), கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் (32), காந்திகிராமத்தைச் சோ்ந்த சுரஜ் (13) , கரூா் பாரதியாா் தெருவைச் சோ்ந்த ரவிகிருஷ்ணன் (29), வேலுச்சாமிபுரத்தைச் சோ்ந்த பழனியம்மாள் (11), கோகிலா (14). மற்றவா்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

கரூர் கூட்ட நெரிசல் பலி: திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், இன்று(செப். 28) நடைபெறவிருந்த திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெள... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து இபிஎஸ் ஆறுதல்!

கரூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி, பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.கரூர் அரசு மருத்துவமனை... மேலும் பார்க்க

விஜய்யின் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்? நடிகை ஆவேசம்!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான நிலையில், தவெக தலைவர் விஜய் மீது நடிகை கயாது லோஹர் குற்றம் சாட்டியுள்ளார்.நடிகை கயாது லோஹர் தனது எக்ஸ் பக்கத்தில்,``உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ... மேலும் பார்க்க

கொலை முயற்சி, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளில் தவெக மீது வழக்கு

கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் பலியான நிலையில், தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில், சனிக்கிழமையில் மேற்கொள்ளப்பட்ட த... மேலும் பார்க்க

அழுகுரல் ஏற்படுத்திய வலி நெஞ்சத்திலிருந்து அகலவில்லை: முதல்வர் ஸ்டாலின்

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் நெடிய வலி தருவதாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,``இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும்... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் பலி: 39 பேரில் 14 பேரின் உடல்கள் ஒப்படைப்பு

கரூர் கூட்ட நெரிசலில் பலியான 14 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.கரூர் கூட்ட நெரிசலில் பலியான 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 14 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இருப்பினும்... மேலும் பார்க்க