செய்திகள் :

கரூர் விஜய் பரப்புரை நெரிசல்: '39 பேர் மரணம்' - தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளில் வழக்கு

post image

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 25,000க்கும் அதிகமான மக்கள் கூடினர்.

கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 12 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய்யின் கரூர் பிரசார நெரிசல்
விஜய்யின் கரூர் பிரசாரத்தில் நெரிசல்

இந்தநிலையில் தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி. மதியழகன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய குற்றங்களுக்காக, பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 109, 110, 125b மற்றும் 223 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வி.பி.மதியழகன், விஜய்
வி.பி.மதியழகன், விஜய்

விஜய் இரங்கல்

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த விஜய், "இதயம் நொறுங்கிப் போயிருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்றுகொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்." எனப் பதிவிட்டுள்ளார்.

`கூட்ட நெரிசல், மக்கள் மிதித்ததில் 2 வயது நிரம்பாத குழந்தை உயிரிழப்பு' - கரூர் துயர சம்பவம்

நேற்று நடந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 1 3/4 வயது குழந்தை உயிரிழந்திருக்கிறது. இந்தக் குழந்தையின் பெயர் குரு விஷ்ணு. இவரது பெற்றோர் விமல், மாதேஸ்வரி. விமலின் அக்கா குரு விஷ்ணுவைப் பரப்புரைக்கு அ... மேலும் பார்க்க

கரூர்: `ஆளே அடையாளம் தெரியல காயமா இருக்கு, ஒருத்தன் போயிட்டான்; இன்னொருத்தன் எங்க?' -கதறும் உறவினர்

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, நா... மேலும் பார்க்க

கரூர்: ``அடுத்த மாசம் கல்யாணம்; இப்போ பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு பேருமே இல்லை'' - கதறும் குடும்பம்

அடுத்த மாதம் திருமணமாக இருந்த கரூரைச் சேர்ந்த கோகுலஶ்ரீயும், மதுரையைச் சேர்ந்த ஆகாஷும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று நடந்த தவெக தலைவர் விஜய் பரப்புரையைக் காணச் சென்றுள்ளனர். அங்கே ஏற்பட்ட ... மேலும் பார்க்க

கரூர்: ``காப்பாத்துங்கனு கத்துனோம்; போலீஸ் கூட உதவிக்கு வரல'' - உயிரிழந்தவரின் குடும்பம்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தின் பகிர்வு... "என்னோட பேரு அபிநயஶ்ரீ. நாங்க கூட்டத்துக்கு 3.30 மணிக்கு மேலதான் வந்தோம். நாங்க விஜய் பேசுற இடத்துக்கிட்டதான் நின்னுகிட்டு இருந... மேலும் பார்க்க

``சொன்னது 10,000 பேர், வந்தது 25,000+; தண்ணீர், சாப்பாடு இல்லாமல்'' - கரூர் சம்பவம் குறித்து டிஜிபி

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் 25,000க்கும் அதிகமான மக்கள் கூடினர். கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 ப... மேலும் பார்க்க

கரூர் விஜய் பரப்புரை: இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை; ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எவ்வளவு?

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பலர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்துள்ளனர். இதுவரை வெளியான தகவல்கள்: கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை... மேலும் பார்க்க