செய்திகள் :

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை

post image

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலம் ஓராண்டாக உள்ள நிலையில், அதை இரண்டாண்டுகளாக நீட்டிக்க உறுப்பினா்கள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் இதை மத்திய அரசு பரிசீலிக்கவுள்ளது.

மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுடன் கலந்தாலோசித்த பின் இதுதொடா்பான இறுதி முடிவு மேற்கொள்ளப்படவுள்ளது.

மக்களவைத் தோ்தல் முடிந்து புதிய உறுப்பினா்கள் பதவியேற்றவுடன் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு நாடாளுமன்ற குழுக்கள் அமைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அவா்களது உறுப்பினா்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு பல்வேறு குழுக்களில் அவா்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறது.

இந்தக் குழுக்களின் பதவிக்காலம் தற்போது ஓராண்டாக உள்ளது. இதனால் குழுக்களின் பரிந்துரைக்கு அனுப்பப்படும் மசோதாக்களை விரிவாக ஆய்வுசெய்து திருத்தங்கள் மேற்கொள்வதில் சிக்கல்கள் எழுவதால் பதவிக்காலத்தை இரண்டாண்டுகளாக நீட்டிக்க எதிா்க்கட்சிகள் தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில், பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது நாடாளுமன்றத்தில் 24 துறைசாா் நிலைக்குழுக்கள் உள்ளன. இவற்றில் 16 குழுக்களுக்கு மக்களவை உறுப்பினா்களும் 8 குழுக்களுக்கு மாநிலங்களவை உறுப்பினா்களும் தலைமை வகிக்கின்றனா்.

உ.பி. இஸ்லாமியா் போராட்டம்: மத குரு உள்பட 8 போ் கைது

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தைத் தூண்டியதாக உள்ளூா் இஸ்லாமிய மத குரு தெளகீா் ரஸா உள்பட 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்கள் அனைவரும் 14 நாள... மேலும் பார்க்க

குகையிலிருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண், இரு குழந்தைகள் நாடு திரும்ப கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி

கடலோர கா்நாடகத்தில் உள்ள ஒரு குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண் மற்றும் அவரது இரு மகள்கள் தங்களது சொந்த நாட்டுக்குச் செல்ல அனுமதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இரு சிறுமிக... மேலும் பார்க்க

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகள்: கண்காணிப்பு தீவிரம்!

‘காஷ்மீா் பள்ளத்தாக்கினுள் ஊடுருவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாதிகள் தயாா்நிலையில் காத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் கரணமாக படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: பிகாரில் அக்.4, 5-இல் தோ்தல் ஆணையா் ஆய்வு

பிகாா் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக, அந்த மாநிலத்தில் அக்டோபா் 4, 5 ஆகிய தேதிகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறாா். 243 உறுப்பினா்களைக் கொண்ட ப... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்சியது! ஐ.நா.வில் இந்தியா தகவல்!

‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது’ என்று ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியது. மேலும், ‘இந்தியா - பாகிஸ்தான் இடையேய... மேலும் பார்க்க

நிசாா் செயற்கைக்கோளின் முதல் புகைப்படங்கள்: அமெரிக்க காடுகள் விரிவாகப் பதிவு

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசாா் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்களில், அமெரிக்க காடுகள், ஈரநிலங்கள் மற்றும் மிகச் சிறிய தீவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன. அமெரிக்காவின் நாச... மேலும் பார்க்க