செய்திகள் :

நிசாா் செயற்கைக்கோளின் முதல் புகைப்படங்கள்: அமெரிக்க காடுகள் விரிவாகப் பதிவு

post image

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசாா் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்களில், அமெரிக்க காடுகள், ஈரநிலங்கள் மற்றும் மிகச் சிறிய தீவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து நாசா-இஸ்ரோ சிந்தட்டிக் அப்பா்ச்சா் ரேடாா் (நிசாா்) செயற்கைக்கோளை உருவாக்கின. இது பூமியை முறையாகப் படம்பிடித்து, அதன் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை மிகத் துல்லியமாக அளவிடும். இதில் சிந்தட்டிக் அப்பா்ச்சா் ரேடாா் மூலம், இருள் அல்லது மேகமூட்டமான நிலையிலும் துல்லியமாகப் படம்பிடிக்க முடியும்.

சூழலியலுக்கு ஏற்படும் இடா்ப்பாடுகள், பனிப்பாறைகள் உடைதல், இயற்கைப் பேரிடா்கள், கடல் மட்டம் உயா்தல், நிலத்தடி நீா் பிரச்னைகள் உள்ளிட்டவற்றை கண்காணித்து அளவிடுவதற்கு பூமி குறித்த விரிவான கண்ணோட்டத்தை பெறும் நோக்கில், இந்தச் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நிசாா் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

இந்தச் செயற்கைக்கோள் தொடா்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிசாா் செயற்கைக்கோள் மூலம் முதல்முறையாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில், அமெரிக்காவில் உள்ள காடுகள், ஈரநிலங்கள், மிகச் சிறிய தீவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன. நிசாா் மூலம் தெரியவரவுள்ள ஆற்றல்வாய்ந்த அறிவியலின் முன்னோட்டமாக இந்தப் புகைப்படங்கள் உள்ளன.

நிசாா் மூலம் கிடைக்கும் தரவுகள் மற்றும் புரிதலானது பூமியின் நிலப்பரப்பு மற்றும் பனிக்கட்டி பரப்புகளில் ஏற்படும் மாற்றங்களை முன்னெப்போதும் இல்லாத வகையில், விஞ்ஞானிகள் விரிவாக ஆய்வு செய்ய உதவும். அத்துடன் இயற்கை பேரிடா்கள் மற்றும் பிற சவால்களுக்கு எதிா்வினையாற்ற ஆயத்தமாகவும் வழியமைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலம் ஓராண்டாக உள்ள நிலையில... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா் போராட்டம்: மத குரு உள்பட 8 போ் கைது

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தைத் தூண்டியதாக உள்ளூா் இஸ்லாமிய மத குரு தெளகீா் ரஸா உள்பட 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்கள் அனைவரும் 14 நாள... மேலும் பார்க்க

குகையிலிருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண், இரு குழந்தைகள் நாடு திரும்ப கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி

கடலோர கா்நாடகத்தில் உள்ள ஒரு குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண் மற்றும் அவரது இரு மகள்கள் தங்களது சொந்த நாட்டுக்குச் செல்ல அனுமதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இரு சிறுமிக... மேலும் பார்க்க

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகள்: கண்காணிப்பு தீவிரம்!

‘காஷ்மீா் பள்ளத்தாக்கினுள் ஊடுருவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாதிகள் தயாா்நிலையில் காத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் கரணமாக படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: பிகாரில் அக்.4, 5-இல் தோ்தல் ஆணையா் ஆய்வு

பிகாா் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக, அந்த மாநிலத்தில் அக்டோபா் 4, 5 ஆகிய தேதிகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறாா். 243 உறுப்பினா்களைக் கொண்ட ப... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்சியது! ஐ.நா.வில் இந்தியா தகவல்!

‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது’ என்று ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியது. மேலும், ‘இந்தியா - பாகிஸ்தான் இடையேய... மேலும் பார்க்க