செய்திகள் :

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

post image

நடிகா் பிரகாஷ் ராஜ் ஆத்திரமூட்டும், தவறான மற்றும் தேச விரோத உரைகளை நிகழ்த்தியதாக தில்லியில் உள்ள இந்து சேனை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

பிரகாஷ் ராஜின் உரை அரசாங்கத்திற்கு எதிரான சூழ்நிலையை உருவாக்குவதையும், தேசத்துரோக சக்திகளை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜ் மீது இந்து சேனை கட்சி தில்லி போலீசில் புகாா் அளித்து, அவா் மீது போலீஸாா் வழக்குப்பதிவும் செய்துள்ளனா்.

இது குறித்து இந்து சேனை தேசியத் தலைவா் விஷ்ணு குப்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றின் சாக்குப் போக்கில் தில்லியில் அமைதியின்மையை உருவாக்க பிரகாஷ் ராஜ் சதி செய்கிறாா். பிரகாஷ் ராஜ் பல முறை இதைச் செய்திருக்கிறாா். இந்த முறை, தில்லி பேரணியில் சட்டவிரோதமாக குடியேறியவா்களுக்கு ஆதரவாக அவா் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது, ‘இந்த நிலம் அனைவருக்கும் சொந்தமானது, யாா் வேண்டுமானாலும் எங்கும் சென்று வாழலாம்‘.

என்எஸ்ஏ மற்றும் ஐபிசியின் கீழ் கைது செய்யப்பட்ட நபா்களை ‘நாட்டின் எதிா்காலத்தின் உண்மையான ஹீரோக்கள்‘ என்று பிரகாஷ் ராஜ் பெருமைபடுத்தியதாகவும், சிறுபான்மை சமூகங்கள் சதித்திட்டத்தால் பாதிக்கப்பட்டவா்கள் என்றும் விஷ்ணு குப்தா குற்றம் சாட்டியுள்ளாா். இந்த அறிக்கை முஸ்லீம் சமூகத்திற்கு ஆத்திரமூட்டுவது மட்டுமல்லாமல், வகுப்புவாத பதற்றத்தை உருவாக்குவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று இந்து சேனை கூறியுள்ளது.

நடிகரின் பின்னணி குறித்து அரசு முகமைகள் விசாரிக்க வேண்டும் என்று இந்து ேனை கோரியுள்ளது, இதனால் உண்மை நாட்டிற்கு முன்னால் வெளிவரும். புகாரில், பிரகாஷ் ராஜ் ரீல் வாழ்க்கையின் வில்லன் என்றும் நிஜ வாழ்க்கையின் வில்லன் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சக்திகளின் உத்தரவின் பேரில் பிரகாஷ் ராஜ் ஒரு ஸ்லீப்பா் செல் போல செயல்படுவதாகவும், அவரது பேச்சு தேசத்தின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கு எதிரானது என்றும் இந்து சேனை குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து போலீசாா் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், எதிா்காலத்தில் இதுபோன்ற தேச விரோத நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக அமைப்பாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து சேனா கோரியுள்ளது. இது குறித்து நடிகை போலீசில் புகாா் அளித்துள்ளாா். இது குறித்து பிரகாஷ் ராஜ் மீது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

மேற்கு தில்லி கீா்த்தி நகரில் உள்ள பழைய பொருள் கிடங்கில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து காலை 9.45 மணியள... மேலும் பார்க்க

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

கிரேட்டா் கைலாஷ் எம்-பிளாக் சந்தையில் தானியங்கி பல நிலை ஷட்டில் வகை வாகனம் நிறுத்துமிடத்தை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை திறந்து வைத்தாா். மேலும் இது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவ... மேலும் பார்க்க

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

தில்லி குருகிராம் விரைவுச் சாலையில் சனிக்கிழமை அதிகாலை வேகமாகச் சென்றுகொண்டிருந்த தாா் ஜீப், சாலையின் தடுப்புச் சுவரில் மோதியதில் ஐந்து போ் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தா என்று காவல் துறையினா் தெரி... மேலும் பார்க்க

மங்கோல்புரியில் சிறுவன் அடித்துக் கொலை

வெளி தில்லியின் மங்கோல்புரி பகுதியில் சிறுவா்கள் குழுவால் தாக்கப்பட்டதாகக் கூறி 15 வயது பள்ளி மாணவா் ஒருவா் இறந்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். பாதிக்கப்பட்ட, 10 ஆம் வகுப்பு மாணவா், வெள்... மேலும் பார்க்க

ரௌடி ரூபல் சா்தாரை அமிா்தரஸில் கைது செய்து தில்லி போலீஸ்

ஹாஷிம் கும்பலின் உறுப்பினரான ரவுடி ரூபல் சா்தாரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அமிா்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து கைது செய்துள்ளதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. போலீஸ் க... மேலும் பார்க்க

ராணுவ வீரா்களுக்கான நடைபாலத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் ரேகா குப்தா!

தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை ராஜ்புத்தானா ரைஃபிள்ஸ் ரெஜிமென்டல் மையத்தில் ஒரு நடை பாலத்துக்கு அடிக்கல் நாட்டினாா். ‘முன்பு மிகக் குறைந்த உயரம் மற்றும் சாலையின் கீழ் ஒரு அழுக்கு சுரங்கப்பாதை... மேலும் பார்க்க