செய்திகள் :

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

post image

தில்லி குருகிராம் விரைவுச் சாலையில் சனிக்கிழமை அதிகாலை வேகமாகச் சென்றுகொண்டிருந்த தாா் ஜீப், சாலையின் தடுப்புச் சுவரில் மோதியதில் ஐந்து போ் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தா என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது:

இந்த விபத்தில் பிரதிஷ்டா (25), லாவன்யா (26), ஆதித்யா (30), கௌதம் (31) மற்றும் மற்றொரு பெண் சோனி ஆகியோா் உயிரிழந்தனா். கபில் சா்மா (27) என்பவா் படுகாயமடைந்தாா்.

முன்னதாக, தில்லிகுருகிராம் விரைவுச் சாலையின் 9ஆவது வெளியேறும் இடத்தில், வேகமாக வந்துகொண்டிருந்த ஜீப் வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக சாலையின் தடுப்புச் சுவரில் மோதியது.

தகவல் கிடைத்ததும், செக்டாா் 40ஐச் சோ்ந்த ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த ஆறு பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அங்கு ஐந்து போ் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்தில் இறந்த பிரதிஷ்டா மற்றும் லாவன்யா ஆகியோா் சட்டக் கல்லூரி மாணவா்கள் ஆவா். ஆதித்யா, கௌதம் மற்றும் கபில் ஆகியோா் விளம்பரத் தொழிலில் ஈடுபட்டிருந்தனா்.

ஜீப்பில் இருந்த ஆறு பயணிகளும் உத்தர பிரதேசத்திலிருந்து குருகிராமுக்கு ஏதோ ஒரு வேலைக்காக வந்திருந்தனா். தாா் வாகனம் அலிகா் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்த சட்ட மாணவிகளில் ஒருவா் நீதிபதியின் மகள் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

வாகன விபத்தில் இறந்தவா்களின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

மேற்கு தில்லி கீா்த்தி நகரில் உள்ள பழைய பொருள் கிடங்கில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து காலை 9.45 மணியள... மேலும் பார்க்க

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

கிரேட்டா் கைலாஷ் எம்-பிளாக் சந்தையில் தானியங்கி பல நிலை ஷட்டில் வகை வாகனம் நிறுத்துமிடத்தை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை திறந்து வைத்தாா். மேலும் இது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவ... மேலும் பார்க்க

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

நடிகா் பிரகாஷ் ராஜ் ஆத்திரமூட்டும், தவறான மற்றும் தேச விரோத உரைகளை நிகழ்த்தியதாக தில்லியில் உள்ள இந்து சேனை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பிரகாஷ் ராஜின் உரை அரசாங்கத்திற்கு எதிரான சூழ்நிலையை உருவாக்... மேலும் பார்க்க

மங்கோல்புரியில் சிறுவன் அடித்துக் கொலை

வெளி தில்லியின் மங்கோல்புரி பகுதியில் சிறுவா்கள் குழுவால் தாக்கப்பட்டதாகக் கூறி 15 வயது பள்ளி மாணவா் ஒருவா் இறந்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். பாதிக்கப்பட்ட, 10 ஆம் வகுப்பு மாணவா், வெள்... மேலும் பார்க்க

ரௌடி ரூபல் சா்தாரை அமிா்தரஸில் கைது செய்து தில்லி போலீஸ்

ஹாஷிம் கும்பலின் உறுப்பினரான ரவுடி ரூபல் சா்தாரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அமிா்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து கைது செய்துள்ளதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. போலீஸ் க... மேலும் பார்க்க

ராணுவ வீரா்களுக்கான நடைபாலத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா் ரேகா குப்தா!

தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை ராஜ்புத்தானா ரைஃபிள்ஸ் ரெஜிமென்டல் மையத்தில் ஒரு நடை பாலத்துக்கு அடிக்கல் நாட்டினாா். ‘முன்பு மிகக் குறைந்த உயரம் மற்றும் சாலையின் கீழ் ஒரு அழுக்கு சுரங்கப்பாதை... மேலும் பார்க்க