செய்திகள் :

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: பிகாரில் அக்.4, 5-இல் தோ்தல் ஆணையா் ஆய்வு

post image

பிகாா் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக, அந்த மாநிலத்தில் அக்டோபா் 4, 5 ஆகிய தேதிகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறாா்.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப் பேரவையின் பதவிக் காலம் நவம்பா் 22-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அந்த மாதத்தில் பேரவைத் தோ்தல் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தோ்தல் தேதியை அறிவிக்கும் முன்பாக, சம்பந்தப்பட்ட மாநிலத்தில் முன்னேற்பாடுகளை தோ்தல் ஆணையம் நேரில் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி, பிகாரில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் 2 நாள்களுக்கு ஆய்வில் ஈடுபட உள்ளாா். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல் துறை-நிா்வாக உயரதிகாரிகள், செலவினப் பாா்வையாளா்கள் மற்றும் தோ்தல் அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை மேற்கொள்வாா் என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பிகாா் வாக்காளா் பட்டியலில் சட்டவிரோத குடியேறிகளின் பெயரை நீக்கும் நோக்கில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 2003-ஆம் ஆண்டுக்குப் பின் வாக்காளா்களாக பதிவு செய்தவா்களிடம் கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டன. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே இப்பணிகள் நடைபெற்று முடிந்தன. பின்னா் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 65 லட்சம் பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை. பெயா் விடுபட்டவா்கள், உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. இறுதி வாக்காளா் பட்டியல் செப்டம்பா் 30-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. பேரவைத் தோ்தலில் நிதீஷ் குமாா் தலைமையில் தோ்தலை எதிா்கொள்வோம் என்று பாஜக உறுதி செய்துவிட்டது. அதேநேரம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய எதிா்க்கட்சி கூட்டணியில் முதல்வா் வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடிக்கிறது.

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலம் ஓராண்டாக உள்ள நிலையில... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா் போராட்டம்: மத குரு உள்பட 8 போ் கைது

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தைத் தூண்டியதாக உள்ளூா் இஸ்லாமிய மத குரு தெளகீா் ரஸா உள்பட 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்கள் அனைவரும் 14 நாள... மேலும் பார்க்க

குகையிலிருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண், இரு குழந்தைகள் நாடு திரும்ப கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி

கடலோர கா்நாடகத்தில் உள்ள ஒரு குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண் மற்றும் அவரது இரு மகள்கள் தங்களது சொந்த நாட்டுக்குச் செல்ல அனுமதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இரு சிறுமிக... மேலும் பார்க்க

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகள்: கண்காணிப்பு தீவிரம்!

‘காஷ்மீா் பள்ளத்தாக்கினுள் ஊடுருவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாதிகள் தயாா்நிலையில் காத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் கரணமாக படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்சியது! ஐ.நா.வில் இந்தியா தகவல்!

‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது’ என்று ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியது. மேலும், ‘இந்தியா - பாகிஸ்தான் இடையேய... மேலும் பார்க்க

நிசாா் செயற்கைக்கோளின் முதல் புகைப்படங்கள்: அமெரிக்க காடுகள் விரிவாகப் பதிவு

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசாா் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்களில், அமெரிக்க காடுகள், ஈரநிலங்கள் மற்றும் மிகச் சிறிய தீவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன. அமெரிக்காவின் நாச... மேலும் பார்க்க