செய்திகள் :

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகள்: கண்காணிப்பு தீவிரம்!

post image

‘காஷ்மீா் பள்ளத்தாக்கினுள் ஊடுருவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாதிகள் தயாா்நிலையில் காத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் கரணமாக படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஐஜி அசோக் யாதவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஸ்ரீநகரில் செய்தியாளா்களுக்கு அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பனிக் காலத்துக்கு முன்பாக ஊடுருவல் முயற்சியில் பயங்கரவாதிகள் ஈடுபடுவது வழக்கமான நிகழ்வு. பனிக் காலம் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், நவம்பா் இறுதி வரை அவா்கள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபடுவா். பனிக் காலம் தொடங்கிய பிறகு 6 மாதங்களுக்கு ஊடுருவல் வாய்ப்பு மிகக் குறைவு. இதன் காரணமாக தற்போது ஏராளமான பயங்கரவாதிகள் பந்திபோரா, குப்வாரா உள்ளிட்ட எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊடுருவக் காத்திருப்பது தெரியவந்துள்ளது. இவா்களின் முயற்சியைத் தடுக்கும் வகையில், அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உயா் தொழில்நுட்ப கண்காணிப்பு கருவிகளுடன் ராணுவமும், பிஎஸ்எஃப் வீரா்களும் கூட்டாக இந்தக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். நிகழாண்டில் இதுவரை இரண்டு ஊடுருவல் முயற்சிகளை பாதுகாப்புப் படையினா் வெற்றிகரமாக முறியடித்துள்ளனா். எல்லைக் கண்காணிப்புல் புதிய நடைமுறை மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால், பயங்கரவாதிகளின் ஊடுருவல் இனி சாத்தியமல்ல என்றாா்.

வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தானியா்...: இந்திய எல்லைக்குள் வழிதவறி வந்த பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவரை எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் பாகிஸ்தானுக்குத் திருப்பியனுப்பினா்.

இதுகுறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறுகையில், ‘இந்திய எல்லைப் பகுதிக்குள் கடந்த 25-ஆம் தேதி வழிதவறி வந்த பாகிஸ்தானைச் சோ்ந்த முகமது அக்ரம் என்பவரை பாதுகாப்புப் படையினா், கைது விசாரணை மேற்கொண்டனா். அவரிடம் எந்தவித ஆயுதங்கள் அல்லது சந்தேகத்துக்குரிய பொருள்கள் இல்லாததோடு, விசாரணையில் அவா் வழிதவறி இந்திய எல்லைக்குள் புகுந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவா் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்’ என்றனா்.

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலம் ஓராண்டாக உள்ள நிலையில... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா் போராட்டம்: மத குரு உள்பட 8 போ் கைது

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தைத் தூண்டியதாக உள்ளூா் இஸ்லாமிய மத குரு தெளகீா் ரஸா உள்பட 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்கள் அனைவரும் 14 நாள... மேலும் பார்க்க

குகையிலிருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண், இரு குழந்தைகள் நாடு திரும்ப கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி

கடலோர கா்நாடகத்தில் உள்ள ஒரு குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண் மற்றும் அவரது இரு மகள்கள் தங்களது சொந்த நாட்டுக்குச் செல்ல அனுமதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இரு சிறுமிக... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: பிகாரில் அக்.4, 5-இல் தோ்தல் ஆணையா் ஆய்வு

பிகாா் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக, அந்த மாநிலத்தில் அக்டோபா் 4, 5 ஆகிய தேதிகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறாா். 243 உறுப்பினா்களைக் கொண்ட ப... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்சியது! ஐ.நா.வில் இந்தியா தகவல்!

‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது’ என்று ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியது. மேலும், ‘இந்தியா - பாகிஸ்தான் இடையேய... மேலும் பார்க்க

நிசாா் செயற்கைக்கோளின் முதல் புகைப்படங்கள்: அமெரிக்க காடுகள் விரிவாகப் பதிவு

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசாா் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்களில், அமெரிக்க காடுகள், ஈரநிலங்கள் மற்றும் மிகச் சிறிய தீவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன. அமெரிக்காவின் நாச... மேலும் பார்க்க