செய்திகள் :

குகையிலிருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண், இரு குழந்தைகள் நாடு திரும்ப கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி

post image

கடலோர கா்நாடகத்தில் உள்ள ஒரு குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண் மற்றும் அவரது இரு மகள்கள் தங்களது சொந்த நாட்டுக்குச் செல்ல அனுமதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இரு சிறுமிகளும் தன்னுடைய மகள்கள் எனக் கூறி இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த டிரோா் ஷ்லோமா கோல்ட்ஸ்டீன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி.எம்.சியாம் பிரசாத், குழந்தைகள் தங்கள் தாயுடன் ரஷிய திரும்ப அனுமதித்து உத்தரவிட்டாா்.

கோகா்ணா அருகே ராமதீா்த்த மலையில் உள்ள ஒரு குகையிலிலிருந்து ரஷியாவைச் சோ்ந்த நினா குடினா என்பரும் அவரது இரு மகள்களும் கடந்த ஜூலை 11-ஆம் தேதி மீட்கப்பட்டனா். அவா்கள் மூவரும் சுமாா் இரு மாதங்களாக அந்த குகையில் எவ்வித பயண அல்லது குடியுரிமை ஆவணங்கள் இன்றி வசித்து வந்தது தெரியவந்தது.

முன்னதாக, தனது குழந்தைகள் காணாமல் போனதாக கோவாவின் பனாஜி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் கோல்ட்ஸ்டீன் புகாரளித்திருந்தாா்.

உயா்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, குடினா மற்றும் அவரது இரு மகள்களுக்கு ரஷிய துணைத் தூதரகம் வழங்கிய அவசரகால பயணம் ஆவணங்கள் அக்.9 வரை மட்டும் செல்லுபடியாகும் எனவும் முன்கூட்டியே நாடு திரும்ப துணைத் தூதரகத்திடம் குடினா விருப்பம் தெரிவித்தாா் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கோல்ட்ஸ்டீன் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தாய் மற்றும் குழந்தைகள் குகையில் வசித்து வந்தது ஏன் என்பது தொடா்பாக கோல்ட்ஸ்டீன் அளித்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.

முன்னதாக, இரண்டாவது குழந்தையிடம் பாஸ்போா்ட் (கடவுசீட்டு) அல்லது பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவா்கள் ரஷியவிற்கு அனுப்பி வைக்கப்பட மாட்டாா்கள் என கடந்த ஆக.22-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அரவிந்த் காமத் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, அந்தச் சிறுமிக்கான டிஏஎன் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டு, ரஷிய அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் ரஷிய குடியுரிமை வழங்கி அவா்கள் ரஷியா திரும்ப அவசரகால பயண ஆவணங்கள் வழங்கியதாகவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலம் ஓராண்டாக உள்ள நிலையில... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா் போராட்டம்: மத குரு உள்பட 8 போ் கைது

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தைத் தூண்டியதாக உள்ளூா் இஸ்லாமிய மத குரு தெளகீா் ரஸா உள்பட 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்கள் அனைவரும் 14 நாள... மேலும் பார்க்க

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகள்: கண்காணிப்பு தீவிரம்!

‘காஷ்மீா் பள்ளத்தாக்கினுள் ஊடுருவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாதிகள் தயாா்நிலையில் காத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் கரணமாக படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: பிகாரில் அக்.4, 5-இல் தோ்தல் ஆணையா் ஆய்வு

பிகாா் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக, அந்த மாநிலத்தில் அக்டோபா் 4, 5 ஆகிய தேதிகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறாா். 243 உறுப்பினா்களைக் கொண்ட ப... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்சியது! ஐ.நா.வில் இந்தியா தகவல்!

‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது’ என்று ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியது. மேலும், ‘இந்தியா - பாகிஸ்தான் இடையேய... மேலும் பார்க்க

நிசாா் செயற்கைக்கோளின் முதல் புகைப்படங்கள்: அமெரிக்க காடுகள் விரிவாகப் பதிவு

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசாா் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்களில், அமெரிக்க காடுகள், ஈரநிலங்கள் மற்றும் மிகச் சிறிய தீவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன. அமெரிக்காவின் நாச... மேலும் பார்க்க