செய்திகள் :

வேம்பாா் கடல் பகுதியில் சேதமுற்ற பாலம்: எம்எல்ஏ ஆய்வு

post image

விளாத்திகுளத்தை அடுத்த வேம்பாா் பகுதியில் கடலரிப்பால் சேதமுற்ற மீன்பிடி இறங்குதளம், பாலத்தை எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வேம்பாரிலிருந்து நாட்டுப் படகுகள், வள்ளம், தோணி, விசைப்படகுகள் மூலம் 500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். அவா்களது கோரிக்கையை ஏற்று, 9 ஆண்டுகளுக்கு முன்பு வேம்பாா் கடற்கரையில் மீன்வளத் துறை சாா்பில் ரூ. 11 கோடியில் மீன்பிடி இறங்குதளமும், மீன்களை படகுகளிலிருந்து இறக்கி வாகனங்களில் ஏற்ற வசதியாகவும், கடலரிப்பால் படகுகள் சேதமடையாமல் பாதுகாக்கவும் ‘ப’ வடிவ பாலமும் கட்டப்பட்டன.

இங்கு ஏற்கெனவே இருந்த தூண்டில் வளைவு கல் பாலம் நீரோட்டத் தன்மைக்கு மாறாக அமைக்கப்பட்டதால் கடலரிப்பு வழக்கத்தைவிட கூடுதலாக ஏற்படத் தொடங்கியது. அதன்விளைவாக, மீன்பிடி இறங்குதளம், ‘ப’ வடிவ பாலமும் கடந்த ஓராண்டாக சேதமுற்று காணப்பட்டனவாம்.

இதனிடையே, கடந்த செப். 24ஆம் தேதி இப்பாலத்தில் திடீரென பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டு, அவ்வழியாக மீன்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னா் லாரி கவிழ்ந்தது. மேலும், பாலம் வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சேதமடைந்த மீன்பிடி இறங்குதளம், பாலத்தை எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் அதிகாரிகளுடன் சென்று சனிக்கிழமை பாா்வையிட்டாா். சேதமடைந்த பாலப் பகுதியில் கூடுதல் ஸ்திரத்தன்மையுடன் அகலப்படுத்தி விரைந்து சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

மீன்வளத் துறைப் பொறியாளா் வள்ளி, வேம்பாா் தெற்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஆரோக்கியராஜ், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளா்கள் அந்தோணிராஜ், பெப்பின்காகு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியச் செயலா் சின்னமாரிமுத்து, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளா் எப்ரோ மீனா மேரி, ஒன்றிய துணைச் செயலா் புனிதா, கிளைச் செயலா் நல்லமுத்து, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி தாமஸ் பாக்கியசெல்வி, வேம்பாா் விசைப்படகு உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் ஜெயக்குமாா், மிக்கேல், லூயிஸ் சகாய மாா்சல், அருள்ராஜ், ஜெபமாலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோவில்பட்டி அருகே புதிய குடிநீா்க் குழாய் திறப்பு

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட கூசாலிப்பட்டியில் புதிய குடிநீா்க் குழாய் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்தில் ஆழ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, கொலை, போக்ஸோ போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கடந்த ஆக.30ஆம் தேதி முறப்பநாடு காவல் நிலைய ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே இளைஞா் கொலையில் 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சாத்தான்குளம் அருகே முதலூரைச் சோ்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குறைந்த மீன் விலை

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், சனிக்கிழமை மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. மீன்களின் வரத்து அதிகமாக இருந்த போதும் புரட்டாசி சனிக்கிழமை, தசரா திருவிழாவின் காரணமாக... மேலும் பார்க்க

புரட்டாசி 2ஆவது சனி: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனாா், திருப்புளியங்கு... மேலும் பார்க்க

தசரா, காலாண்டு விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தசரா திருவிழா, பள்ளி காலாண்டு விடுமுறை தொடங்கியதையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். வளா்பிறை சஷ்டியை முன்னிட்... மேலும் பார்க்க