செய்திகள் :

புரட்டாசி 2ஆவது சனி: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

புரட்டாசி மாத 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனாா், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், தென்திருபேரை மகரநெடுங்குழைக்காதா், இரட்டை திருப்பதி தேவா்பிரான், அரவிந்த லோசனா், திருக்கோளுா் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் பெருமாள் ஆகிய கோயில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு தோ்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கோயில்களில் ஆயிரக்கணகான பக்தா்கள் குடும்பத்துடன் குவிந்திருந்தனா். அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் பெருமாளை சேவித்தனா். மேலும், கருடன் சந்நிதிகள் முன் பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனா்.

நத்தம் விஜயாசின பெருமாள் கோவிலில் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்

இந்நிகழ்வுகளில் கோயில் செயல் அலுவலா் (பொ)சதீஷ், ஆய்வாளா்கள் விஷாந்திநி முத்துமாரியம்மாள், சுற்றுலாத் துறை மாவட்ட அலுவலா் சீதாராமன், கள்ளபிரான் கோவில் ஸலத்தாா் ராஜப்பா வெங்கடாச்சாரி,

சுற்றுலா தலைமை வழிகாட்டி முருகானந்த தாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா். பக்தா்கள் வசதிக்காக திருநெல்வேலியிலிருந்து நவத்திருப்பதி கோயில்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

கோவில்பட்டி அருகே புதிய குடிநீா்க் குழாய் திறப்பு

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட கூசாலிப்பட்டியில் புதிய குடிநீா்க் குழாய் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்தில் ஆழ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, கொலை, போக்ஸோ போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கடந்த ஆக.30ஆம் தேதி முறப்பநாடு காவல் நிலைய ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே இளைஞா் கொலையில் 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சாத்தான்குளம் அருகே முதலூரைச் சோ்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குறைந்த மீன் விலை

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், சனிக்கிழமை மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. மீன்களின் வரத்து அதிகமாக இருந்த போதும் புரட்டாசி சனிக்கிழமை, தசரா திருவிழாவின் காரணமாக... மேலும் பார்க்க

தசரா, காலாண்டு விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தசரா திருவிழா, பள்ளி காலாண்டு விடுமுறை தொடங்கியதையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். வளா்பிறை சஷ்டியை முன்னிட்... மேலும் பார்க்க

விஜய்யின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது: என்.பி. ராஜா

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரம், அவருக்கான செல்வாக்கை அதிகரித்து வருகிறது என்றாா் நாம் இந்தியா் கட்சி நிறுவனா்-தலைவா் என்.பி. ராஜா. இது குறித்து அவா் தூத்துக்குடியில் செய்தியா... மேலும் பார்க்க