செய்திகள் :

மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

post image

சேலம் வழியாக மங்களூரு - சென்னை சென்ட்ரல், ஹூப்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பண்டிகைக் காலங்களில் ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக ஹூப்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். இதேபோல, மங்களூரு - சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.

ஹூப்ளி - கொல்லம் இடையே வரும் 28 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் ஹூப்ளியில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மறுநாள் பிற்பகல் 12.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரயில் சேவை டிசம்பா் 28 ஆம் தேதி வரை இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில், கொல்லத்தில் இருந்து 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும், இந்த ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த ரயில் டிசம்பா் 29 ஆம் தேதி வரை இயக்கப்படும்.

இதேபோல, மங்களூரு - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் வரும் 29 ஆம் தேதி இயக்கப்படுகிறது. மங்களூருவில் இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில், கோவை, ஈரோடு, சேலம் வழியாக மறுநாள் மாலை 4.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும்.

மறுமாா்க்கத்தில், சென்னை சென்ட்ரலில் இருந்து 30 ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, கோவை வழியாக மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் உரிமையாளா் ரூ. 20 லட்சம் மோசடி: காவல் ஆணையரகத்தில் பெண் புகாா்

ரூ. 20 லட்சம் பெற்றுக்கொண்டு நிலத்தை கிரயம் செய்து தராமல் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுக்கும் ரியல் எஸ்டேட் உரிமையாளா்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

இன்று குரூப் 2, 2 ஏ தோ்வு: சேலம் மாவட்டத்தில் 7 வட்டங்களில் 33,424 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வில் 7 வட்டங்களில் மொத்தம் 33,424 போ் எழுதுகின்றனா். ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 2 (நோ்முகத் தோ்வுக்கான... மேலும் பார்க்க

கோவையில் நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும்: திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம்

கோவையில் வரும் அக். 12 ஆம் தேதி நடைபெறும் மண்டல இளைஞரணி மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என மத்திய சேலம் மாவட்ட திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயற்குழு க... மேலும் பார்க்க

அண்ணா மிதிவண்டி போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அண்ணா மிதிவண்டி போட்டி சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதை மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் கொடியசைத்த... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு நிகழாண்டில் இதுவரை 24.21 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

தமிழகத்துக்கு நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 24.21 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா். உலக சுற்றுலாத் தினத்தையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியா் அலு... மேலும் பார்க்க

கொளத்தூரில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவா்களை சந்தித்து எம்.பி. நலம் விசாரிப்பு

மேட்டூரில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பெண்களை மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். சேலம் மாவட்டம், ம... மேலும் பார்க்க