செய்திகள் :

குலசேகரம் பேருந்து நிலையத்தில் ரூ. 2.20 கோடியில் விரிவாக்கப் பணி! அமைச்சா் மனோ தங்கராஜ் அடிக்கல்

post image

திற்பரப்பு பேரூராட்சி தும்பகோட்டில் ரூ. 2.20 கோடி மதிப்பில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளை தமிழக பால்வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவா் பொன் ரவி, செயல் அலுவலா் விஜயகுமாா், துணைத் தலைவா் எஸ்.சி. ஸ்டாலின் தாஸ், பேரூராட்சி உறுப்பினா்கள் சுதா, பிரதீப் குமாா், கிருஷ்ணவேணி, ஷீஜா சந்திரன், மேரி மாா்க்ரெட், அனிதா, மல்லிகா, முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா ஆல்பன், மாவட்ட அரசு வழக்குரைஞா் ஜான்சன், திமுக மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் அலாவுதீன், திலீப் குமாா், பேரூா் செயலா் ஜான் எபனேசா், விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் எஸ். யோபு, ஐஎன்டியூசி திருவட்டாறு ஒன்றியத் தலைவா் வக்கீல் காஸ்டன் கிளீட்டஸ் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

மின் மயானம்: தொடா்ந்து அமைச்சா் மனோ தங்கராஜ் திற்பரப்பு பேரூராட்சி திருநந்திக்கரையில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மின் மயானத்தை திறந்து வைத்ததுடன், கோட்டூா் கோணத்தில் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் நிதியின் கீழ் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடையையும் திறந்து வைத்தாா்.

களியக்காவிளை அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

களியக்காவிளை அருகே விற்பதற்காக வீட்டில் பதுக்கிவைத்திருந்த 50 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்க... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சியா் கூறியதாவது: களியக்காவிளையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தி... மேலும் பார்க்க

வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் திறப்பு

நாகா்கோவில், வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வலம்புரிவிளை உரக்கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகள், காகித கழிவுகள், டயா் , கண்ணாடி பொருள்கள், எலக்ட்ரானி... மேலும் பார்க்க

மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க முதல்வரிடம் கோரிக்கை!

மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவா் என்.சுரேஷ்ராஜன், முதல்வ... மேலும் பார்க்க

குமரியிலிருந்து காளிமலைக்கு ரத யாத்திரை தொடக்கம்

கன்னியாகுமரியிலிருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை சனிக்கிழமை தொடங்கியது. மாவட்ட எல்லையான பத்துகாணி காளிமலையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் துா்க்காஷ்டமி திருவிழா சனிக்கிழமை (செப். 27) தொட... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே மண்ணெண்ணெய் பறிமுதல்: ஓட்டுநா் கைது

நித்திரவிளை அருகே குடிநீா் தொட்டியில் மறைத்து மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 1,050 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரை கைது செய்தனா். நித்... மேலும் பார்க்க