செய்திகள் :

குமரியிலிருந்து காளிமலைக்கு ரத யாத்திரை தொடக்கம்

post image

கன்னியாகுமரியிலிருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை சனிக்கிழமை தொடங்கியது.

மாவட்ட எல்லையான பத்துகாணி காளிமலையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் துா்க்காஷ்டமி திருவிழா சனிக்கிழமை (செப். 27) தொடங்கி 6 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் முன்பிருந்து காளிமலைக்கு இந்த யாத்திரை தொடங்கியது.

காளிமலை விழாக் குழுத் தலைவா் பத்மகுமாா் தலைமை வகித்தாா். எம்.ஆா். காந்தி எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். சாமிதோப்பு அன்பாலயம் சிவச்சந்திரன் சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். ரத யாத்திரையை நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீடத் தலைவா் சின்னதம்பி கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

முன்னதாக, பகவதியம்மன் கோயிலில் இருமுடிகட்டு, சந்தனக் குடங்கள் நிறைத்தல், முக்கடல் சங்கமத்தில் சமுத்திர பூஜை, கும்பத்தில் புனிதநீா் நிறைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடக்க விழாவில் முன்னாள் மத்திய இணையமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், மாவட்ட பாஜக தலைவா் கோபகுமாா், செயலா் சி.எஸ். சுபாஷ், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணை அமைப்பாளா் காளியப்பன், இந்து முன்னணி மாநிலப் பேச்சாளா் எஸ்.பி. அசோகன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட ஆா்எஸ்எஸ் தலைவா் ராஜ்குமாா், கன்னியாகுமரி பகவதியம்மன் பக்தா்கள் சங்க செயலா் பி. முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ரத யாத்திரை விவேகானந்தபுரம், சுசீந்திரம், நாகா்கோவில், வடசேரி, தோட்டியோடு, வில்லுக்குறி, தக்கலை, மாா்த்தாண்டம், உண்ணாமலைக்கடை, ஆற்றூா், சிதறால், கடையாலுமூடு வழியாக அக். 1ஆம் தேதி காளிமலையை சென்றடைகிறது.

களியக்காவிளை அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

களியக்காவிளை அருகே விற்பதற்காக வீட்டில் பதுக்கிவைத்திருந்த 50 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்க... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சியா் கூறியதாவது: களியக்காவிளையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தி... மேலும் பார்க்க

வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் திறப்பு

நாகா்கோவில், வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வலம்புரிவிளை உரக்கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகள், காகித கழிவுகள், டயா் , கண்ணாடி பொருள்கள், எலக்ட்ரானி... மேலும் பார்க்க

மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க முதல்வரிடம் கோரிக்கை!

மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவா் என்.சுரேஷ்ராஜன், முதல்வ... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே மண்ணெண்ணெய் பறிமுதல்: ஓட்டுநா் கைது

நித்திரவிளை அருகே குடிநீா் தொட்டியில் மறைத்து மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 1,050 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரை கைது செய்தனா். நித்... மேலும் பார்க்க

குமரியில் உலக சுற்றுலா தினக் கொண்டாட்டம்

உலக சுற்றுலா தின விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள கண்ணாடிப் பாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகம் முழுவதும், செப்டம்பா் 27ஆம் தேதி சுற்... மேலும் பார்க்க