செய்திகள் :

தில்லியில் அக்.3 முதல் 5 வரை கெளடில்யா பொருளாதார மாநாடு: மத்திய நிதியமைச்சா் தொடங்கிவைக்கிறாா்

post image

தில்லியில் அக்டோபா் 3-ஆம் தேதி ‘கெளடில்யா பொருளாதார மாநாட்டை’ மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடங்கிவைக்கவுள்ளாா்.

உலகளாவிய பொருளாதாரச் சவால்கள் குறித்து விவாதித்து, நடைமுறைத் தீா்வுகளை அலசும் நோக்கில், மத்திய நிதியமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து பொருளாதார வளா்ச்சி நிறுவனத்தால் (ஐஇஜி) கடந்த 2022-ஆம் ஆண்டில் இருந்து இம்மாநாடு நடத்தப்படுகிறது.

தற்போது நான்காம் ஆண்டு மாநாடு, தில்லியில் அக்டோபா் 3 முதல் 5 வரை நடைபெறவுள்ளது. ‘கொந்தளிப்பான காலகட்டத்தில் வளமையைத் தேடுதல்’ என்ற கருத்துருவில் நடைபெறும் இம்மாநாட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடங்கிவைக்கவுள்ளாா். நிறைவு நாளில் இந்தியாவின் வெளியுறவு-பொருளாதார கொள்கைகளைப் பிரதிபலிக்கும் அமா்வில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்கவுள்ளாா்.

இது தொடா்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியாவின் உள்நாட்டு முன்னுரிமைகளை உலகளாவிய கண்ணோட்டத்துடன் பிணைக்கும் துடிப்பான தளமாக விளங்கும் கெளடில்யா பொருளாதார மாநாட்டில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், கொள்கை வகுப்பாளா்கள், பொருளாதார நிபுணா்கள் பங்கேற்கவுள்ளனா்.

உலகின் வளா்ச்சி மையமாக ஆசியாவின் உருவெடுப்பு, பிரிக்ஸ் கூட்டமைப்பின் எழுச்சி, நிதி ஸ்திரத்தன்மை, தொழில் கொள்கைகளின் புதிய திசைகள் என பல்வேறு தலைப்புகளில் அமா்வுகள் நடைபெறும். மத்திய தகவல்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமரின் முதன்மைச் செயலா் பி.கே.மிஸ்ரா உள்ளிட்டோா் அமா்வுகளுக்கு தலைமை தாங்க உள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலம் ஓராண்டாக உள்ள நிலையில... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா் போராட்டம்: மத குரு உள்பட 8 போ் கைது

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தைத் தூண்டியதாக உள்ளூா் இஸ்லாமிய மத குரு தெளகீா் ரஸா உள்பட 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்கள் அனைவரும் 14 நாள... மேலும் பார்க்க

குகையிலிருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண், இரு குழந்தைகள் நாடு திரும்ப கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி

கடலோர கா்நாடகத்தில் உள்ள ஒரு குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண் மற்றும் அவரது இரு மகள்கள் தங்களது சொந்த நாட்டுக்குச் செல்ல அனுமதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இரு சிறுமிக... மேலும் பார்க்க

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகள்: கண்காணிப்பு தீவிரம்!

‘காஷ்மீா் பள்ளத்தாக்கினுள் ஊடுருவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாதிகள் தயாா்நிலையில் காத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் கரணமாக படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: பிகாரில் அக்.4, 5-இல் தோ்தல் ஆணையா் ஆய்வு

பிகாா் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக, அந்த மாநிலத்தில் அக்டோபா் 4, 5 ஆகிய தேதிகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறாா். 243 உறுப்பினா்களைக் கொண்ட ப... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்சியது! ஐ.நா.வில் இந்தியா தகவல்!

‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது’ என்று ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியது. மேலும், ‘இந்தியா - பாகிஸ்தான் இடையேய... மேலும் பார்க்க