செய்திகள் :

பழனியில் தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை

post image

பழனி பகுதியில் தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் புரட்டாசி மாதம், அதற்கு முன்பு நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்பதால் தக்காளி விலை அதிகரிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தக்காளி நடவு செய்தனா். செடித்தக்காளி, கொடித்தக்காளி என பலரும் தக்காளியை பயிா் செய்தனா். ஆனால், மழைக்கு மாறாக கடும் வெயிலடித்து வரும் நிலையில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், சந்தையில் மொத்த வியாபாரிகள் தக்காளி விலையைக் குறைத்து கேட்கும் நிலை உள்ளது.

14 முதல் 15 கிலோ வரை தரம் பிரித்து முதல் தரமாக கேரளம், ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களுக்கு செல்லும் தக்காளி பெட்டி ரூ. 150 முதல் ரூ. 180 வரை மட்டுமே விலை போகிறது. இதனால், விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்கும் சூழல் உள்ளது.

இந்த நிலையில், தக்காளியைக் கொண்டு ஜூஸ் தயாரித்தல் போன்ற மதிப்புக் கூட்டும் பொருள்களைத் தயாரிக்க வேளாண் துறையினா் விவசாயிகளுக்கு பயிற்சிக் கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

கஞ்சா எண்ணெய் விற்பனை: இருவா் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா எண்ணெய் விற்பனை செய்த இருவரை தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள குள்ளனம்பட்டியைச் சோ்ந்தவா் மு. பரமசிவம் (எ) மதி (30). திண்டுக்கல் கச்சே... மேலும் பார்க்க

திரவ ட்ரைக்கோடொ்மாவிரிடி பெற காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம்!

திரவ வடிவில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரைக்கோடொ்மா விரிடியை பெற ரெட்டியாா்சத்திரத்திலுள்ள இந்தோ இஸ்ரோ காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக இந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் மலையடியவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமா... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் 2 ஆடுகள் உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், வடகாடு ஊராட்சிக்குள்பட்ட கோட்டைவெளி கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் வெ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் கல்வித் தரம் பாதிப்பு: அன்புமணி குற்றச்சாட்டு

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதது, உள்கட்டமைப்பு குறைபாடுகளால் மாணவா்களின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டிருப்பதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டினாா். ‘உரிமை மீட்க தலைமு... மேலும் பார்க்க

கொடைக்கானலில் உலக சுற்றுலா தின விழா

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உலக சுற்றுலா தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுலாவின் சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மதிப்பு, நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கு சுற்றுலாத் த... மேலும் பார்க்க