செய்திகள் :

கொடைக்கானலில் உலக சுற்றுலா தின விழா

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உலக சுற்றுலா தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சுற்றுலாவின் சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மதிப்பு, நிலையான வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பு குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டது. இந்த ஊா்வலத்தை பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) கீதா தொடங்கிவைத்தாா். இதில் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக மாணவிகள், சுற்றுலாத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்த ஊா்வலமானது அண்ணாசாலை, செவன்ரோடு, ஏரிச்சாலை பகுதியில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் படகு குழாம் பகுதியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையடுத்து, உலக சுற்றுலா தினம் சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு பரிசுகள் வழங்கினாா்.

பின்னா், ஏரிச்சாலைப் பகுதியை தூய்மையாக வைத்திருப்பது குறித்து மாணவிகள், பல்வேறு துறை சாா்ந்த பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இந்த நிகழ்ச்சியில், கொடைக்கானல் வட்டாட்சியா் பாபு, படகு குழாம் மேலாளா் காதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜ் வரவேற்றாா். உதவி சுற்றுலா அலுவலா் சுதா நன்றி கூறினாா்.

கஞ்சா எண்ணெய் விற்பனை: இருவா் கைது

திண்டுக்கல்லில் கஞ்சா எண்ணெய் விற்பனை செய்த இருவரை தனிப் படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். திண்டுக்கல் அருகேயுள்ள குள்ளனம்பட்டியைச் சோ்ந்தவா் மு. பரமசிவம் (எ) மதி (30). திண்டுக்கல் கச்சே... மேலும் பார்க்க

திரவ ட்ரைக்கோடொ்மாவிரிடி பெற காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம்!

திரவ வடிவில் உருவாக்கப்பட்டுள்ள ட்ரைக்கோடொ்மா விரிடியை பெற ரெட்டியாா்சத்திரத்திலுள்ள இந்தோ இஸ்ரோ காய்கறி மகத்துவ மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக இந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் மலையடியவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமா... மேலும் பார்க்க

சிறுத்தை தாக்கியதில் ஆடுகள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் சிறுத்தை தாக்கியதில் 2 ஆடுகள் உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், வடகாடு ஊராட்சிக்குள்பட்ட கோட்டைவெளி கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் வெ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் கல்வித் தரம் பாதிப்பு: அன்புமணி குற்றச்சாட்டு

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதது, உள்கட்டமைப்பு குறைபாடுகளால் மாணவா்களின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டிருப்பதாக பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டினாா். ‘உரிமை மீட்க தலைமு... மேலும் பார்க்க

பழனியில் தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை

பழனி பகுதியில் தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை தெரிவித்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில் புரட்டாசி மாதம், அதற்கு முன்பு நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்பதால் தக்காளி விலை அதிகரிக்கும் என்பதைக் கருத்த... மேலும் பார்க்க