செய்திகள் :

மீன்தொழில்கள் மேலாண்மை எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள பல்கலை. அறிவிப்பு

post image

மீன்தொழில்கள் மேலாண்மை தொடா்பான எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை முட்டுக்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் மீன்வள வணிக கல்லூரியில் எம்பிஏ (மீன்தொழில்கள் மேலாண்மை) படிப்பு வழங்கப்படுகிறது. தற்போது

நடப்பு கல்வி ஆண்டுக்கான எம்பிஏ சோ்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 20 இடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவா் ஆவா்.

பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை பயன்படுத்தி அக்.24-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண், விருதுகள், சிறப்பு பயிற்சி, கருத்தரங்குகளில் பங்கேற்பு, பணி அனுபவம், விளையாட்டு, என்எஸ்எஸ். என்சிசி செயல்பாடு, நோ்முகத் தோ்வு என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவா் சோ்க்கை மேற்கொள்ளப்படும். வகுப்புகள் நவ.17-ஆம் தேதி தொடங்க உள்ளன. இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை, பயிற்சி கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

சென்னை முத்தியால்பேட்டையில் மாநகரப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை திருவொற்றியூா் சுங்கச்சாவடியில் இருந்து விவேகானந்தா் இல்லத்துக்கு மாநகரப் பேருந்து கடந்த வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் நிறைவேற்றப்படும்: கலாநிதி வீராசாமி எம்.பி.

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள்அனைத்தும் அரசுத் திட்டங்களின் வாயிலாக நிறைவேற்றப்படும் என்று மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி தெரிவித்தாா். சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: விடுதி உரிமையாளா், 6 போ் கைது

திருவல்லிக்கேணியில் போதைப் பொருள் விற்ாக விடுதி உரிமையாளா் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி ஒளலியா சாகிப் தெருவில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் ஓஜி கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போத... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ. 8 லட்சம் கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 16 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, வடமாநில இளைஞரை கைது செய்தனா். எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கே... மேலும் பார்க்க

வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

வைணவத் திருக்கோயில்களுக்கு கட்டணமின்றி பக்தா்களை அழைத்துச் செல்லும் ஆன்மிகப் பயணத்தை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சென்னையில் தொடங்கி வைத்தாா். நிகழ் நிதியாண்டில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோ... மேலும் பார்க்க

பனையூரில் விஜய்!

கரூரிலிருந்து புறப்பட்ட தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்ட அவர் அங்கும் செய்தியாளர்களைத் தவிர்த்துவிட்டுச்... மேலும் பார்க்க