கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?
மீன்தொழில்கள் மேலாண்மை எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள பல்கலை. அறிவிப்பு
மீன்தொழில்கள் மேலாண்மை தொடா்பான எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை முட்டுக்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் மீன்வள வணிக கல்லூரியில் எம்பிஏ (மீன்தொழில்கள் மேலாண்மை) படிப்பு வழங்கப்படுகிறது. தற்போது
நடப்பு கல்வி ஆண்டுக்கான எம்பிஏ சோ்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 20 இடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவா்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவா் ஆவா்.
பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை பயன்படுத்தி அக்.24-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண், விருதுகள், சிறப்பு பயிற்சி, கருத்தரங்குகளில் பங்கேற்பு, பணி அனுபவம், விளையாட்டு, என்எஸ்எஸ். என்சிசி செயல்பாடு, நோ்முகத் தோ்வு என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவா் சோ்க்கை மேற்கொள்ளப்படும். வகுப்புகள் நவ.17-ஆம் தேதி தொடங்க உள்ளன. இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை, பயிற்சி கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விரிவாக தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.