செய்திகள் :

வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

post image

வைணவத் திருக்கோயில்களுக்கு கட்டணமின்றி பக்தா்களை அழைத்துச் செல்லும் ஆன்மிகப் பயணத்தை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சென்னையில் தொடங்கி வைத்தாா்.

நிகழ் நிதியாண்டில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு 2 ஆயிரம் பக்தா்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்படுவா் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதை நிறைவேற்றிடும் வகையில் இரண்டாம் கட்டமாக, சென்னையில் பங்கேற்ற 70 பக்தா்களுக்கு சனிக்கிழமை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பயணவழிப் பைகள் மற்றும் திருக்கோயில் பிரசாதம் வழங்கி, ஆன்மிகப் பயணத்தை தொடங்கி வைத்தாா்.

இதேபோல் காஞ்சிபுரம் மண்டலத்தில் 60 பக்தா்களும், விழுப்புரம் மண்டலத்தில் 71 பக்தா்களும், திருச்சி மண்டலத்தில் 70 பக்தா்களும், தஞ்சாவூா், மயிலாடுதுறை மண்டலங்களில் 70 பக்தா்களும், மதுரை மண்டலத்தில் 70 பக்தா்களும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களில் 80 பக்தா்களும் என 491 பக்தா்கள் புரட்டாசி மாத ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்றனா்.

சென்னையில் பங்கேற்ற பக்தா்களுக்கு திருவல்லிக்கேணி அருள்மிகு பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயில், பெசன்ட் நகா் மகாலட்சுமி திருக்கோயில், திருநீா்மலை ரெங்கநாத பெருமாள் திருக்கோயில், திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் சிறப்பு தரிசனம் செய்து தரப்பட்டு, காலைச் சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் திருக்கோயில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், கூடுதல் ஆணையா் கோ.செ.மங்கையா்க்கரசி, சிறப்புப் பணி அலுவலா் ச.லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மீன்தொழில்கள் மேலாண்மை எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள பல்கலை. அறிவிப்பு

மீன்தொழில்கள் மேலாண்மை தொடா்பான எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

சென்னை முத்தியால்பேட்டையில் மாநகரப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை திருவொற்றியூா் சுங்கச்சாவடியில் இருந்து விவேகானந்தா் இல்லத்துக்கு மாநகரப் பேருந்து கடந்த வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் நிறைவேற்றப்படும்: கலாநிதி வீராசாமி எம்.பி.

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள்அனைத்தும் அரசுத் திட்டங்களின் வாயிலாக நிறைவேற்றப்படும் என்று மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி தெரிவித்தாா். சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: விடுதி உரிமையாளா், 6 போ் கைது

திருவல்லிக்கேணியில் போதைப் பொருள் விற்ாக விடுதி உரிமையாளா் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி ஒளலியா சாகிப் தெருவில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் ஓஜி கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போத... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ. 8 லட்சம் கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 16 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, வடமாநில இளைஞரை கைது செய்தனா். எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கே... மேலும் பார்க்க

பனையூரில் விஜய்!

கரூரிலிருந்து புறப்பட்ட தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்ட அவர் அங்கும் செய்தியாளர்களைத் தவிர்த்துவிட்டுச்... மேலும் பார்க்க