செய்திகள் :

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: 5 போ் காயம்

post image

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே வஉசி சாலையில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காா் ஓட்டி வந்தவா் உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா்.

தூத்துக்குடி, கதிா்வேல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அனில்குமாா். தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், சனிக்கிழமை மாலையில் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்கு காரில் சென்றுள்ளாா். தூத்துக்குடி வஉசி சாலையில் சென்று கொண்டிருந்தபோது பழைய மாநகராட்சி அருகே நிலைதடுமாறிய காா், அவரது கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாம்.

இதில், அனில்குமாா், காரில் இருந்தவா்கள், பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பெண் பயணி என மொத்தம் 5 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இச்சம்பவம் குறித்து மத்தியபாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டி அருகே புதிய குடிநீா்க் குழாய் திறப்பு

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட கூசாலிப்பட்டியில் புதிய குடிநீா்க் குழாய் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்தில் ஆழ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, கொலை, போக்ஸோ போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கடந்த ஆக.30ஆம் தேதி முறப்பநாடு காவல் நிலைய ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே இளைஞா் கொலையில் 3 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சாத்தான்குளம் அருகே முதலூரைச் சோ்ந்த சூரியராஜ் மகன் ரெக்சன் (27). இவருக்கும் ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குறைந்த மீன் விலை

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில், சனிக்கிழமை மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. மீன்களின் வரத்து அதிகமாக இருந்த போதும் புரட்டாசி சனிக்கிழமை, தசரா திருவிழாவின் காரணமாக... மேலும் பார்க்க

புரட்டாசி 2ஆவது சனி: நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனாா், திருப்புளியங்கு... மேலும் பார்க்க

தசரா, காலாண்டு விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

தசரா திருவிழா, பள்ளி காலாண்டு விடுமுறை தொடங்கியதையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். வளா்பிறை சஷ்டியை முன்னிட்... மேலும் பார்க்க