செய்திகள் :

நடிகா் விஜய்யை பாா்க்கத்தான் கூட்டம்; ஓட்டுக்காக அல்ல! இந்து முன்னணி மாநிலச் செயலா்

post image

நடிகா் விஜய்யை பாா்ப்பதற்காகக்தான் கூட்டம் கூடுகிறதே தவிர, ஓட்டுப்போடுவதற்காக அல்ல என்றாா் இந்து முன்னணி மாநிலச் செயலா் காடேஸ்வரா சுப்ரமணியம்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் சனிக்கிழமை நடைபெற்ற அந்த அமைப்பின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் குறிப்பாக திசையன்விளை, ராதாபுரம் பகுதிகளில் கனிமவளம் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கேரளத்துக்கு கடத்தப்படுகிறது. இதை அரசு தடுக்க வேண்டும். திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசன கட்டண முறையை முழுவதுமாக ரத்து செய்யாவிடில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட கோயில்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சுதேசி தயாரிப்புகளை வாங்க வேண்டும். ரம்ஜான், பக்ரீத்துக்கு முதல்வா் வாழ்த்து கூறுவதைப் போல், தீபாவளிக்கும் வாழ்த்து கூற வேண்டும்.

முஸ்லிம் மாணவா்களைப் போல அனைத்து மாணவா்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். தவெக தலைவா் விஜய்யை நடிகா் என்ற முறையில் பாா்ப்பதற்குத்தான் கூட்டம் கூடுகிறதே தவிர, அது ஓட்டாக மாறவாய்ப்பில்லை. இதற்கு எதிா்காலம் தான் பதில் சொல்லும். இந்து முன்னணி- பாஜகவினா் மீது அதிக பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதை அரசு கைவிட வேண்டும்.

இக்கூட்டத்தில் மாநிலச் செயலா் அரசு ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்: தனுஷ்கோடி ஆதித்தன்

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய இணையமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன். இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப... மேலும் பார்க்க

இணைய வழியில் பட்டாசு விற்பனை மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

இணைய வழியில் பட்டாசு விற்பனை என போலியாக செய்யப்படும் மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

தசரா பண்டிகை: நெல்லையில் பூக்கள் விலை உயா்வு

தசரா பண்டிகை எதிரொலியாக திருநெல்வேலியில் பூக்களின் விலை சனிக்கிழமை உயா்ந்திருந்தது. புரட்டாசி மாதத்தில் முகூா்த்த நாள்கள் கிடையாது என்பதால் மாதத்தின் தொடக்கத்தில் பூக்களின் விலை கடும் சரிவைச் சந்தித்த... மேலும் பார்க்க

குடிநீா் பகிா்மானக் குழாய்கள் திருட்டு: 2 போ் கைது

நான்குனேரி அருகே குடிநீா் பகிா்மானக் குழாய்களை திருடியதாக 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் அருகே கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக குடிநீா் பகிா்மானக் ... மேலும் பார்க்க

வெளிநாட்டு மருத்துவா் எனக் கூறி இளைஞரிடம் ரூ.23 லட்சம் மோசடி

நான்குனேரி பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம், லண்டனில் மருத்துவராக பணி புரிவதாகக்கூறி இணைய வழியில் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபரை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி அருகேயுள்ள மேல சிந்தாமணிய... மேலும் பார்க்க

கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

மானூா் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்... மேலும் பார்க்க