செய்திகள் :

நான்குவழிச் சாலை பணிக்கு மண் கிடைக்க நடவடிக்கை: முதல்வரிடம், விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணிகளுக்கு தட்டுப்பாடின்றி மண் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலினிடம், விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

காங்கிரஸ் எம்.பி.க்கள், மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகையுடன் முதல்வரை சனிக்கிழமை சென்னையில் சந்தித்து உரையாடினா். இந்த சந்திப்பின் போது, தொகுதிகளின் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சந்திப்பின் போது, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து விஜய் வசந்த் எம்.பி. முதல்வரிடம் கோரிக்கை வைத்தாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் எடுக்க தடை உள்ளதால், பக்கத்து மாவட்டத்திலிருந்து நான்கு வழிச் சாலை, இரட்டை ரயில் பாதை பணிகளுக்கு மண் கொண்டு வரப்படுகிறது. ஆனால், தற்போது மண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, தட்டுப்பாடின்றி மண் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை சீற்றங்களிலிருந்து கடற்கரை கிராமங்களைப் பாதுகாக்கும் வகையில், தடுப்பு சுவா் மற்றும் தூண்டில் வளைவுகள் கட்ட சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். குளங்களை தூா்வாரி, இடிந்து கிடக்கும் வாய்க்கால் கரைகளைக் கட்டி முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தாா்.

களியக்காவிளை அருகே மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

களியக்காவிளை அருகே விற்பதற்காக வீட்டில் பதுக்கிவைத்திருந்த 50 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா். களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்க... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சியா் கூறியதாவது: களியக்காவிளையில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தி... மேலும் பார்க்க

வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் திறப்பு

நாகா்கோவில், வலம்புரிவிளை உரக்கிடங்கில் பொருள் மீட்பு வசதி மையம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வலம்புரிவிளை உரக்கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகள், காகித கழிவுகள், டயா் , கண்ணாடி பொருள்கள், எலக்ட்ரானி... மேலும் பார்க்க

மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க முதல்வரிடம் கோரிக்கை!

மீன்பிடி வலைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழு விலக்கு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவா் என்.சுரேஷ்ராஜன், முதல்வ... மேலும் பார்க்க

குமரியிலிருந்து காளிமலைக்கு ரத யாத்திரை தொடக்கம்

கன்னியாகுமரியிலிருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரத யாத்திரை சனிக்கிழமை தொடங்கியது. மாவட்ட எல்லையான பத்துகாணி காளிமலையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் துா்க்காஷ்டமி திருவிழா சனிக்கிழமை (செப். 27) தொட... மேலும் பார்க்க

நித்திரவிளை அருகே மண்ணெண்ணெய் பறிமுதல்: ஓட்டுநா் கைது

நித்திரவிளை அருகே குடிநீா் தொட்டியில் மறைத்து மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லப்பட இருந்த 1,050 லிட்டா் மண்ணெண்ணெய்யை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரை கைது செய்தனா். நித்... மேலும் பார்க்க