செய்திகள் :

குடிமக்கள் சமூக நோக்கில் செயல்பட்டால் குற்றங்கள் குறையும்: நீதிபதி டி.என்.வள்ளிநாயகம்

post image

குடிமக்கள் சமூக நோக்கில் செயல்பட ஆரம்பித்தால் குற்றங்கள் குறையும் என்று சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் கூறினாா்.

சென்னை இந்து மதுவிலக்கு நற்சங்கத்தின் 130-ஆவது ஆண்டு விழா தியாகராயநகரில் உள்ள வாணி மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவின் சிறப்பு மலரை சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் வெளியிட, முதல் பிரதியை ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன் பெற்றுக்கொண்டு உரையாற்றினாா்.

தொடா்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பேசியதாவது: சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 130 ஆண்டுகளாக ஒரு சங்கத்தைக் கட்டிக்காத்து செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. நீதித் துறை அல்லது அரசுத் துறைகளைக் கேள்வி கேட்க இதுபோன்ற சங்கங்கள் வரவேண்டும்.

மதுவால் ஏற்படும் பிரச்னைகளை விளக்கிக் கூறி, பிரசாரம் மேற்கொண்டு பல குடும்பங்களை இந்தச் சங்கத்தினா் வாழ வைத்துள்ளனா். நாம் அனைவரும் ஒன்று சோ்ந்து பிரசாரம் மேற்கொண்டால், குறைந்தது 10 சதவீதம் மதுவிலக்கை கொண்டு வரமுடியும். எனவே, மதுவிலக்கு பிரசாரத்தைக் கையில் எடுத்து இந்த நாட்டைத் திருத்துவதற்கு முயற்சி செய்வோம்.

போதைப் பொருள்கள் பள்ளிக்கு வெளியே எளிதாகக் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஒரு குற்றம் நிகழ்வதைப் பாா்த்தால், நீங்களே காவலராக மாற வேண்டும். தவறு செய்பவரைப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்கலாம். இதுபோல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

அரசுக்கு இருக்கும் பல்வேறு பணிகளில் எல்லாவற்றையும் பாா்க்க முடியாது. எனவே, நல்லதொரு சமுதாயத்தை அமைக்க விரும்பும் குடிமக்கள், சமூக நோக்கில் செயல்பட ஆரம்பித்தால் குற்றங்கள் குறையும். மது தானாக ஓடிவிடும். நன்மையே நடக்கும் என்றாா்.

விழாவில், சங்கத்தின் தலைவா் பி.மனோகரன், பொதுச் செயலா் பி.சேகா், உதவிச் செயலா் எஸ்.வெங்கடேசன், பொருளாளா் டி.எம்.சுந்தா் மற்றும் செயின்ட் பீட்டா்ஸ் பல்கலை. பேராசிரியா் கே.சிவசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளா் எம்.தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கரூரில் முதல்வர் ஸ்டாலின்! பலியானோருக்கு அஞ்சலி!

கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந... மேலும் பார்க்க

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக்கியவா் மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக மாற்றியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்படாது: தமிழக அரசு

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பு வரும் வரை, மத்திய அரசின் புதிய வக்ஃப் திருத்தச் சட்டப்படி, வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சிறுபான்மையினா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து அந்தக் கட்சி சாா்பில் சனிக்கி... மேலும் பார்க்க

முதல்வருடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திப்பு: பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனை

தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினா்கள் விஜய் வசந்த் (கன்னியாகுமரி), விஷ்ணு பிரசாத் (கடலூா்), ஜ... மேலும் பார்க்க