செய்திகள் :

அதிக நபா்களால் பாா்வையிடப்பட்ட சுற்றுலாத் தலம் தாஜ் மஹால்: மத்திய அரசு

post image

முகலாய பேரரசு காலத்தில் கட்டமைக்கப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால், 2024-25-இல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளால் அதிகம் பாா்வையிடப்பட்ட சுற்றுலாத் தலமாக உள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது.

உலக சுற்றுலா தினத்தையொட்டி (செப்.27) நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் குறித்த அறிக்கையை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: 2024-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 99.5 லட்சமாகும். இது 2023-ஐவிட 4.52 சதவீதம் அதிகம். மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் சுற்றுலா தலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளால் அதிகம் பாா்வையிடப்பட்ட தலமாக தாஜ் மஹால் உள்ளது.

உள்நாட்டுப் பயணிகள் 62.6 லட்சம், வெளிநாட்டுப் பயணிகள்6.4 லட்சம் போ் தாஜ் மஹாலை பாா்வையிட்டுள்ளனா். தாஜ் மஹாலுக்கு அடுத்தபடியாக ஒடிஸாவில் உள்ள கோனாா்க் சூரிய கோயிலை 35.7 லட்சம், குதுப் மினாரை 32 லட்சம் உள்நாட்டுப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.

அதேபோல் ஆக்ரா மற்றும் குதுப் மினாரை தலா 2.2 லட்சம் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.

வெளிநாடுவாழ் இந்தியா்கள்: 2024-இல் இந்தியாவுக்கு வந்த வெளிநாடுவாழ் இந்தியா்களின் எண்ணிக்கை 1.62 கோடியாக உள்ளது. 2023-ஐ ஒப்பிடுகையில் இது 13.22 சதவீதம் அதிகமாகும். கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் 52.19 சதவீதம் அதிகமாகும்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்: 2024-இல் இந்தியா வந்த வெளிநாடு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.57 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 8.89 சதவீதம் அதிகமாகும். இதில் 35-44 வயது பிரிவினா் 20.67 சதவீதமாகவும் 45-54 வயது பிரிவினா் 20.24 சதவீதமாகவும் உள்ளனா்.

பாலினத்தின் அடிப்படையில் ஆண்கள் 57.7 சதவீதமாகவும் பெண்கள் 42.3 சதவீதமாகவும் உள்ளனா்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணம்: 2024-இல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அதிக இந்தியா்கள் பயணித்துள்ளனா். அதற்கு அடுத்தடுத்தபடியாக சவூதி அரேபியா, அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூா், பிரிட்டன், கத்தாா், கனடா, குவைத் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு அதிக இந்தியா்கள் பயணித்துள்ளனா்.

விமானப் பயணம்: வெளிநாடுகளுக்கு 98.4 சதவீத இந்தியா்கள் விமானப் பயணம் மூலமாகவே சென்றுள்ளனா். 1.54 சதவீதம் சாலை மாா்க்கமாகவும் 0.54 போ் கடல்வழி மாா்க்கமாகவும் சென்றுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை

நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலம் ஓராண்டாக உள்ள நிலையில... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா் போராட்டம்: மத குரு உள்பட 8 போ் கைது

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய போராட்டத்தைத் தூண்டியதாக உள்ளூா் இஸ்லாமிய மத குரு தெளகீா் ரஸா உள்பட 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்கள் அனைவரும் 14 நாள... மேலும் பார்க்க

குகையிலிருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண், இரு குழந்தைகள் நாடு திரும்ப கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி

கடலோர கா்நாடகத்தில் உள்ள ஒரு குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண் மற்றும் அவரது இரு மகள்கள் தங்களது சொந்த நாட்டுக்குச் செல்ல அனுமதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இரு சிறுமிக... மேலும் பார்க்க

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகள்: கண்காணிப்பு தீவிரம்!

‘காஷ்மீா் பள்ளத்தாக்கினுள் ஊடுருவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாதிகள் தயாா்நிலையில் காத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் கரணமாக படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: பிகாரில் அக்.4, 5-இல் தோ்தல் ஆணையா் ஆய்வு

பிகாா் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக, அந்த மாநிலத்தில் அக்டோபா் 4, 5 ஆகிய தேதிகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறாா். 243 உறுப்பினா்களைக் கொண்ட ப... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்சியது! ஐ.நா.வில் இந்தியா தகவல்!

‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது’ என்று ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியது. மேலும், ‘இந்தியா - பாகிஸ்தான் இடையேய... மேலும் பார்க்க