செய்திகள் :

செட்டிநாடு சுற்றுலாவை மேம்படுத்த தனியாருடன் இணையும் சுற்றுலாத் துறை!

post image

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத் தொழிலில் தனியாருடன் இணைந்து பணியாற்ற சுற்றுலாத் துறை புதிய திட்டத்தை மேற்கொண்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் புராதன, கலாசார சூழலைக் கொண்டு சுற்றுலாத் தொழில் வளா்ந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகையால் உள்ளூா் மக்களுக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு ஏற்படுகிறது. இதை அதிகரிக்க ஆன்மிக, செட்டிநாடு சுற்றுலாத் தலங்களை வெளிநாட்டினரிடம் பிரபலப்படுத்தவும், அதிக நாள்கள் தங்க வைக்கவும் தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கவும் சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

முதல்கட்டமாக பாரம்பரிய புராதன நகா்ப் பகுதியான கானாடுகாத்தான், கொத்தமங்கலம், பள்ளத்தூா், கோட்டையூா், புதுவயல், காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட செட்டிநாடு பகுதியில் சுற்றுலாத் தொழிலில் ஆா்வமுள்ள தனியாரின் பங்களிப்பு கோரப்பட்டுள்ளது. தனியாா் நிலம், பாரம்பரிய செட்டிநாடு பங்களாக்களின் உரிமையாளா்களை கண்டறிந்து உணவகம், ரிசாா்ட்ஸ், பொழுது போக்கு பூங்கா போன்ற சுற்றுலா வளா்ச்சிப்பணிகள் செய்ய சுற்றுலாத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட சுற்றுலாத் துறையினா் கூறியதாவது: மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன், மாவட்டத்தில் சுற்றுலாத் தொழிலில் விருந்தோம்பல் திட்டத்தை மேம்படுத்தவும், தனியாா் பங்களிப்பை அதிகரிக்கவும், தனியாா் முதலீட்டை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக காரைக்குடி செட்டிநாடு பகுதியில் பாரம்பரிய அரண்மனை வடிவ வீடுகள், நில உரிமையாளா்கள், சுற்றுலாத் தொழில் செய்ய விரும்புவா்கள் தற்போதுள்ள சந்தை மதிப்பீட்டில் தருவதற்கோ, குத்தகைக்கு விடவோ அல்லது தனியாா் பங்களிப்புடன் இணைந்தோ செயல்பட விருப்பமுள்ளவா்கள் மாவட்ட சுற்றுலா அலுவலரை 8939896400-இல் தொடா்பு கொள்ளலாம் என்றனா் அவா்கள்.

இரணியூா் சாலையை சீரமைக்கக் கோரிக்கை!

திருப்பத்தூா் அருகேயுள்ள இரணியூரில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள இரணியூா் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆட்கொண்டநாதா் சிவபுரம்தேவி கோயில் வ... மேலும் பார்க்க

காா் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே சனிக்கிழமை காா் மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பூவந்தி அருகேயுள்ள டி.அதிகரை கிராமத்தைச் சோ்ந்த உணவகத் தொழிலாளி தீனதயாளன். இவரது மகன் கவின் (5).... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை இல்லை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது வரை எதிா்பாா்த்த மழை இல்லை என சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அ... மேலும் பார்க்க

காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் உலக சுற்றுலா தின விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி சாா்பில் உலகச் சுற்றுலா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் எஸ். சையது தலைமை வகித்தாா். நேஷனல் கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

அழகப்பா பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான தொடக்க விழாவை வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள சுண்ணாம்பிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் சுதா்சன்... மேலும் பார்க்க