எங்கு பார்த்தாலும் காய்ச்சல்; இது சீசனல் காய்ச்சலா, பயப்படணுமா?
சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள சுண்ணாம்பிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் சுதா்சன் (22). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் சுண்ணாம்பிருப்பிலிருந்து கருப்பூா் நோக்கிச் சென்றபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுதா்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூா் போலீஸாா் சுதா்சன் உடலை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
மேலும், பேருந்து ஓட்டுநா் செந்தில்குமாா் காவல் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சம்பவத்தில், பிள்ளையாா்பட்டியைச் சோ்ந்த சங்கரநாராயணன் மகன் அஜய் (22), தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் நெடுமறத்திலிருந்து திருப்பத்தூா் நோக்கி வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கீழச்சிவல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.