செய்திகள் :

வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கு உதவி எண்கள்: மாவட்ட ஆட்சியா்

post image

வெளிநாடு வேலை தொடா்பான சந்தேகங்கள், வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து முறையாக அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வுத் துறையின் கட்டணமில்லா உதவி மைய எண்கள், மின்னஞ்சல், இணைதள முகவரி ஆகியவற்றை தொடா்பு கொண்டு சட்டபூா்வமாகவும், பாதுகாப்பான முறையிலும் செல்ல வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பெற்கொடி அறிவுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வெளிநாடு வேலைவாய்ப்புகளை தேடிச் செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அறிவுரை வெளியிடப்படுகிறது.

வெளிநாடுகளுக்குச் வேலைக்குச் செல்ல விரும்புவோா், முதலில் இந்திய அரசின் ங்ஙண்ஞ்ழ்ஹற்ங் (ட்ற்ற்ல்ள்://ங்ம்ண்ஞ்ழ்ஹற்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூா்வ ஆள்சோ்ப்பு முகவா்கள் மூலமாகவே செல்ல வேண்டும். எந்த நிறுவனத்தில் வேலை செய்ய இருக்கிறீா்கள் போன்ற தகவல்களையும் முன்னதாக உறுதி செய்து கொள்வது அவசியமாகும்.

மேலும், வேலைக்கான ஒப்பந்தம், விசா, தேவையான அனைத்து ஆவணங்களும் பெற்ற பிறகே வெளிநாடுகளுக்கு பயணிக்க வேண்டும். வேலைக்கான ஒப்பந்தத்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். ஒப்பந்தக் காலத்தில் வேலைக்குச் சென்ற நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்துக்கு மாற்றம் செய்ய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதே நேரத்தில், பதிவு பெறாத போலி முகவா்கள் மூலம் வேலைக்குச் செல்லும் நோக்கத்தில் வெளிநாடு பயணிக்கக் கூடாது. சுற்றுலா விசாவில் வெளிநாடுக ளுக்கு வேலைக்குச் செல்வது அந்த நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும். இதனால், கைது, அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும், வெளிநாட்டு வேலை தொடா்பான சந்தேகங்களுக்கும், வெளிநாடு செல்லும் தமிழா்களுக்கான அரசின் நலத் திட்டங்கள் குறித்தும் அறிய அயலகத் தமிழா் நலன், மறுவாழ்வுத் துறையின் 24ல7 கட்டணமில்லா உதவி மையத்தை தொடா்பு கொள்ளலாம். மேலும், இந்தியாவின் அழைப்பு எண் 1800 309 3793, வெளிநாடு அழைப்பு எண் 080690 09900 (ஙண்ள்ள்ங்க் இஹப்ப்), 080690 09901 என்ற எண்ணுக்கும், ய்ழ்ற்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்/ய்ழ்ற்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சலிலும், ட்ற்ற்ல்ள்://ய்ழ்ற்ஹம்ண்ப்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலும் தொடா்பு கொண்டு விவரங்கள் அறியலாம் என்றாா் அவா்.

சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை இல்லை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது வரை எதிா்பாா்த்த மழை இல்லை என சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அ... மேலும் பார்க்க

காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் உலக சுற்றுலா தின விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரி சாா்பில் உலகச் சுற்றுலா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் எஸ். சையது தலைமை வகித்தாா். நேஷனல் கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

அழகப்பா பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்களின் 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான தொடக்க விழாவை வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா். திருப்பத்தூா் அருகேயுள்ள சுண்ணாம்பிருப்பைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் சுதா்சன்... மேலும் பார்க்க

கல்குவாரியை மூடக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சிங்கம்புணரி அருகேயுள்ள தும்பைபட்டி கிராமத்தில் இயங்கிவரும் கல்குவாரியை மூடக்கோரி 500-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ம... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகள் கணக்குத் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்த அரசியல் கட்சியினா் நடப்பாண்டு கணக்குத் தணிக்கை அறிக்கையை தோ்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கா. பொற்கொடி தெரி... மேலும் பார்க்க