எடப்பாடி கே. பழனிசாமிக்கு எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. கண்டனம்
கல்குவாரியை மூடக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
சிங்கம்புணரி அருகேயுள்ள தும்பைபட்டி கிராமத்தில் இயங்கிவரும் கல்குவாரியை மூடக்கோரி 500-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள மாம்பட்டி பஞ்சாயத்துக்குள்பட்ட தும்பைபட்டி கிராமத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த நிலையில், கல்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் இரண்டாவது முறையாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
எங்கள் கிராமங்களைச் சுற்றி செயல்படும் கல்குவாரிகளால் கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. மேலும், அவற்றை வெட்டி எடுப்பதற்காக வைக்கப்படும் வெடிகளால் காற்று மாசுபடுவதோடு, பெரும் சத்தத்தால் இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இரவு, பகலாக அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், வன விலங்குகளும் பெரிதளவு பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 6-க்கும் மேற்பட்டோா் உயிரிந்தனா். இந்த நிலையில், விபத்து ஏற்பட்ட கல்குவாரிக்கு அருகிலேயே மற்றொரு கல்குவாரிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இதில் உடனடியாகத் தலையிட்டு எங்கள் கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மேலும், சம்பவ இடத்துக்கு வந்த சிங்கம்புணரி வட்டாட்சியா் நாகநாதனிடம், கல்குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை மாவட்ட ஆட்சியா் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, தற்காலிகமாக குவாரி பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், நிரந்தரமாக மூடுவதற்கு மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கைகளை முன் வைப்பதாகவும் வட்டாட்சியா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு, சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழுத் முன்னாள் தலைவா் பொன்மணி பாஸ்கரன், பாஜக மாவட்டத் தலைவா் பாண்டித்துரை, தவெக மாவட்டச் செயலா் ஜோசப் தங்கராஜ், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனா். மேலும், நிரந்தரத் தீா்வு கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில் தொடா்ந்து பல்வேறு ஆா்ப்பாட்டமும் போராட்டமும் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனா்.