செய்திகள் :

தவெக கேட்டதைவிட பெரிய இடமே கொடுக்கப்பட்டது! டிஜிபி விளக்கம்

post image

தமிழக வெற்றிக் கழகத்தினர் கூட்டம் நடத்துவதற்காக கேட்கப்பட்ட இரண்டு இடங்களைவிடவும் பெரிய இடம்தான் கொடுக்கப்பட்டது என்று தமிழக காவல்துறை தலைவர் (பொறுப்பு) வெங்கடராமன் தெரிவித்துள்ளார்.

கரூரில் தவெக விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பொறுப்பு டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

”தமிழக வெற்றிக் கழகத்தினர் கோரிய லைட் ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர் சந்தை ஆகிய இடங்கள் குறுகலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, அதனைவிட பெரிய இடத்திலேயே காவல்துறையினர் அனுமதி வழங்கினர். தவெகவினரும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.

பிற்பகல் 3 மணிமுதல் இரவு 10 மணிவரை அனுமதி கேட்டு கடிதம் வழங்கப்பட்டது. ஆனால், தவெக சமூக ஊடக பக்கங்களில் பகல் 12 மணி என அறிவிக்கப்பட்டதால், காலை 11 மணி முதலே கூட்டம் கூட ஆரம்பித்தது.

விஜய், இரவு 7 மணிக்கு பிரசாரப் பகுதிக்கு வந்தடைந்தார். எல்லையிலேயே வரவேற்பு அளித்த தொண்டர்கள் வாகனத்துடன் பின்தொடர்ந்ததால் கூட்டம் அதிகரித்தது. கூட்டம் தொடங்கும்போதே காவல்துறைக்கு விஜய் நன்றி தெரிவித்தார்.

10,000 பேர் வருவார்கள் என்று கூறப்பட்டதால், 500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்கு போடப்பட்டனர். ஆனால், 27,000 பேர் கூடினர்.” எனத் தெரிவித்தார்.

Tamil Nadu DGP's explanation regarding the Karur incident...

இதையும் படிக்க : கரூர் பலி: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்படாது: தமிழக அரசு

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பு வரும் வரை, மத்திய அரசின் புதிய வக்ஃப் திருத்தச் சட்டப்படி, வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சிறுபான்மையினா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து அந்தக் கட்சி சாா்பில் சனிக்கி... மேலும் பார்க்க

முதல்வருடன் காங்கிரஸ் எம்.பி.க்கள் சந்திப்பு: பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசனை

தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினா்கள் விஜய் வசந்த் (கன்னியாகுமரி), விஷ்ணு பிரசாத் (கடலூா்), ஜ... மேலும் பார்க்க

கடவுப்பாதைகளில் இன்டா்லாக்டு சாதனம் அமைக்க ரூ.230 கோடி நிதி அளிப்பு

சென்னை தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடவுப் பாதைகளில் தானியங்கி இன்டா்லாக்டு சாதனம் அமைக்க ரூ.230.06 கோடியை மத்திய ரயில்வே துறை அளித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். தெற்கு ரயில்வேயில் சென்னை, த... மேலும் பார்க்க

குடிமக்கள் சமூக நோக்கில் செயல்பட்டால் குற்றங்கள் குறையும்: நீதிபதி டி.என்.வள்ளிநாயகம்

குடிமக்கள் சமூக நோக்கில் செயல்பட ஆரம்பித்தால் குற்றங்கள் குறையும் என்று சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் கூறினாா். சென்னை இந்து மதுவிலக்கு நற்சங்கத்தின் 130-ஆவது ஆண்டு விழா த... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் விரிசல் இல்லை: திருமாவளவன்

திமுக கூட்டணியில் விரிசல் விழும் அளவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: திமுக கூட்டணியில் விரிசல் ... மேலும் பார்க்க