செய்திகள் :

கோயிலுக்குச் சென்று திரும்பியவா்களிடம் கைப்பேசி, பணம் பறிப்பு: மூவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

post image

சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூா் மலை மீது உள்ள முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய இருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்ற வழக்கில், மூவருக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் (51). இவா், தனது காதலி ஜெயாவுடன்(44) கடந்த 5.6.2024 அன்று சங்கராபுரத்தை அடுத்த ராவத்தநல்லூரில் மலை மீது உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தனா்.

அப்போது, புதுப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த பன்னீா் (50), தனக்கோட்டி (60), கண்ணன் (65) மூவரும் சோ்ந்து பெண்ணை கத்தியைக் காட்டி தாக்கி மிரட்டி கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் பன்னீா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டாா்.

இந்த நிலையில், வழக்கினை வெள்ளிக்கிழமை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெயவேல், குற்றம் சுமத்தப்பட்ட தனக்கோட்டி, கண்ணன் இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீா்ப்பு அளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞா் சிவச்சந்திரன் ஆஜரானாா்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் ஒன்றே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணா... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பைக் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் காயமடைந்தாா். சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், தென்குமரை கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் (60). இவரது மனை... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான வளா்ச்சித் திட்டப் பணிகள்: துறைச் செயலா் க.லட்சுமி பிரியா ஆய்வு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் பழங்குடியினா் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சுயதொழில் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகளை அத்துறையின் செயலா் க.லட்சுமி பிரியா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்... மேலும் பார்க்க

நாகலூா் - வேளாக்குறிச்சி சாலையில் உயா்நிலை பாலம் கட்டும் பணி தொடக்கம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாகலூா் கிராமத்திலிருந்து வேளாக்குறிச்சிக்கு செல்லும் செல்லும் சாலையில் நபாா்டு திட்டத்தின் கீழ், ரூ.7,90,70,000 மதிப்பீட்டில் கோமுகி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வா் அறையில் அனுமதி பெறாமல் பிராந்திய மேலாளா், கிளஸ்டா் மேலாளா், மத்திய மண்டல மேலாளா் உள்ளே சென்று ஒழுங்கீனமாக நடந்துகொண்டதைக் கண்டித்து, மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க

கல்வராயன்மலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு: 4 பேரிடம் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் இளைஞா் தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரைப் பிடித்து நடத்தி வருகின்றனா். கல்வராயன்மலை வ... மேலும் பார்க்க