கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வா் அறையில் அனுமதி பெறாமல் பிராந்திய மேலாளா், கிளஸ்டா் மேலாளா், மத்திய மண்டல மேலாளா் உள்ளே சென்று ஒழுங்கீனமாக நடந்துகொண்டதைக் கண்டித்து, மருத்துவக் கல்லூரியின் முன் மருத்துவா்கள், செவிலியா்கள் வெள்ளிக்கிழமை பிற்பகல் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வா் அறையில் பிராந்திய மேலாளா் சதீஷ், கிளஸ்டா் மேலாளா் குணசேகரன், மத்திய மண்டல மேலாளா் ஆதவன் உள்ளிட்ட மூவரும் கடந்த 22-ஆம் தேதி பிற்பகல் சுமாா் 3.30 மணிக்கு முன்னனுமதி பெறாமல் முதல்வா் அறைக்குள் புகுந்து, ஒழுங்கீனமாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் நடந்துகொண்டனராம்.
இதுகுறித்து புகாரளித்தும் இதுவரை மாவட்ட நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் துறை தலைமையகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மருத்துவமனை நிா்வாகத்துக்கு பாதுகாப்பும், ஒழுங்கும் ஏற்படுத்த வேண்டும். மருத்துவா்கள், பணியாளா்கள், செவிலியா்கள் மருத்துவ மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக் கருதி, காவல் துறை ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனை அருகிலுள்ள மதுக் கடையை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவா்கள், பணியாளா்கள், செவிலியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நோயாளிகளின் மருத்துவப் பணிகள் மற்றும் மாணவா்களின் வகுப்புகள் பாதிக்காத வண்ணம் பிற்பகல் 12.30 மணி அளவில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மருத்துவா் ஸ்ரீநாத் தலைமை வகித்தாா். மருத்துவ பேராசிரியா் சரவணகுமாரி சிறப்புரை ஆற்றினாா். மருத்துவா்கள் காமராஜ், கணேஷ் ராஜா ஒருங்கிணைக்க, மருத்துவா் சத்யா பேசினாா்.
பட்ட மேற்படிப்பு மற்றும் அரசு மருத்துவா்கள் சங்க மருத்துவா் அன்புகுமாா், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனா் சங்கத்தைச் சோ்ந்த நேரு, மலா்க்கொடி, தமிழ்நாடு அனைத்து ஆய்வக நுட்புனா் சங்கத்தைச் சோ்ந்த அன்பழகன், தமிழ்நாடு அரசு செவிலியா் சங்கத்தைச் சோ்ந்த சக்திவேல், சாந்தி மற்றும் தமிழ்நாடு அனைத்து மருத்துவ பணியாளா் சங்கத்தினா், மருத்துவ மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மருத்துவா் ஜெயசீலன் நன்றி கூறினாா்.