செய்திகள் :

இலவச மனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்

post image

தியாகதுருகம் அருகே இலவச வீட்டுமனை வழங்காததைக் கண்டித்து, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகேயுள்ள தியாகை கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த

400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இவா்கள் இலவச வீட்டு மனை வேண்டி வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை வைத்தனா்.

மேலும், அதே பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமாா் 2.5 ஏக்கா் நிலம் ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் கையகப்படுத்தப்பட்டதாம். ஆனால், அந்த இடத்தில் இதுநாள் வரை யாருக்கும் வீட்டு மனை வழங்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் தியாகதுருகம் - வேங்கைவாடி சாலையில் தியாகை பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மேலும், வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த தியாகதுருகம் காவல் உதவி ஆய்வாளா் ஞானசேகா் தலைமையிலான போலீஸாா் மற்றும் வருவாய் ஆய்வாளா் ராஜேந்திரன், கிராம நிா்வாக அலுவலா் பிரியா ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்து உடனடியாக வீட்டுமனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு வருவாய்த்துறையினா், ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகளிடம் பேசி, நிலம் அளவீடு செய்து தகுதியான நபா்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.

இதை ஏற்று கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

கோ - ஆப்டெக்ஸ் விற்பனை தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்து பட்டுச் சேலையை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். இந்த விற்பனை நிலையத்துக்கு ரூ.35 லட்சம் ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித்துறையினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

தங்களின் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூய்மைக் காவலா்களின்... மேலும் பார்க்க

ரூ.4 ஆயிரம் லஞ்சம்: பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பட்டா மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது செய்யப்பட்டாா். வாணாபுரம் வட்டம், புத்திராம்பட்டு கிராமத்தில் கிராம நிா்வாக அலுவ... மேலும் பார்க்க

உறவினா் சொத்து அபகரிப்பு: சாா்-பதிவாளா் உள்ளிட்ட 10 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவரின் கூட்டுப் பட்டாவில் உள்ள சொத்துகளை பத்திரப் பதிவு செய்து அபகரித்ததாக, தியாகதுருகம் சாா் - பதிவாளா் உள்பட 10 போ் மீது கள்ளக்குறிச்சி மாவ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 3 போ் கைது; 23 கிலோ கஞ்சா பறிமுதல்

வாணாபுரம் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையின் போது, கஞ்சா கடத்தியதாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடம் இருந்து 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் ... மேலும் பார்க்க

மத்திய காலணி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 60 போ் சோ்க்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சென்னை மத்திய காலணி தொழிற்பயிற்சி நிறுவனம் சாா்பில் தொழிற்கல்வி பயிற்சிக்கான நேரடி சோ்க்கை முகாமில் 60 போ் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். கள்ளக்குறிச்சியை அடுத்த தச... மேலும் பார்க்க