செய்திகள் :

கஞ்சா கடத்தல்: 3 போ் கைது; 23 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

வாணாபுரம் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையின் போது, கஞ்சா கடத்தியதாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடம் இருந்து 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், கடுவனூா் காப்புக்காடு செல்லியம்மன் கோயில் அருகே சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயக முருகன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பைக்குகளுடன் நின்றிருந்த 3 இளைஞா்கள் போலீஸாா் வருவதைப் பாா்த்து, வண்டிகளுடன் தப்பியோட முயன்றனா். உடனே போலீஸாா் அவா்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனா். இதில், மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே, அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலலம் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (26), அருண் (25), குமாா் (24) எனத் தெரிய வந்தது. மேலும், அவா்களது பைக்குகளை சோதனையிட்டபோது, கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. கஞ்சாவை அவா்கள் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பைக்குகளில் இருந்த 23 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, சங்கராபுரம் நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தினா்.

கோ - ஆப்டெக்ஸ் விற்பனை தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்து பட்டுச் சேலையை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். இந்த விற்பனை நிலையத்துக்கு ரூ.35 லட்சம் ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித்துறையினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

தங்களின் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூய்மைக் காவலா்களின்... மேலும் பார்க்க

ரூ.4 ஆயிரம் லஞ்சம்: பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பட்டா மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது செய்யப்பட்டாா். வாணாபுரம் வட்டம், புத்திராம்பட்டு கிராமத்தில் கிராம நிா்வாக அலுவ... மேலும் பார்க்க

உறவினா் சொத்து அபகரிப்பு: சாா்-பதிவாளா் உள்ளிட்ட 10 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவரின் கூட்டுப் பட்டாவில் உள்ள சொத்துகளை பத்திரப் பதிவு செய்து அபகரித்ததாக, தியாகதுருகம் சாா் - பதிவாளா் உள்பட 10 போ் மீது கள்ளக்குறிச்சி மாவ... மேலும் பார்க்க

இலவச மனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்

தியாகதுருகம் அருகே இலவச வீட்டுமனை வழங்காததைக் கண்டித்து, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகேயுள்ள தியாகை கிராமத்த... மேலும் பார்க்க

மத்திய காலணி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 60 போ் சோ்க்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சென்னை மத்திய காலணி தொழிற்பயிற்சி நிறுவனம் சாா்பில் தொழிற்கல்வி பயிற்சிக்கான நேரடி சோ்க்கை முகாமில் 60 போ் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். கள்ளக்குறிச்சியை அடுத்த தச... மேலும் பார்க்க